Wednesday, October 23, 2013

பணம் - பதிவு 2



பணம்  - பதிவு 1ல் ...
  • அந்த பணம் எங்கிருந்து வருது ...?
  • பணத்துக்கு எது அடிப்படை ....?
  • அதுக்கு எப்படி மதிப்பு வருது .....? 
அப்படின்னு மூணு கேள்வியோட முடிச்சி இருந்தேன் ....அந்த மூணு கேள்விக்கும் ஒரே விடை தான் ....fractional reserve banking மற்றும் capital ( Basel ) reserve banking அப்படினா என்னான்னு தெரிஞ்சா விடை தெரிஞ்சிடும் ....

fractional reserve banking - அப்படினா பகுதி இருப்பு வங்கி நடை முறை ..
capital ( Basel ) reserve banking - அப்படினா முதல் இருப்பு வங்கி நடை முறை ..

இது ரெண்டும் ஒரே குட்டையில ஊரின மட்டை தான் ...மேம்போக்கா வித்தியாசம் இருக்குற மாதிரி தெரிஞ்சாலும் ..உண்மையில வித்தியாசம் கெடையாது ...

fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடை முறை அப்படினா என்னான்னு முதல பாப்போம் ..இது புரிஞ்சிடுச்சினா capital ( Basel) 
reserve banking - முதல் இருப்பு வங்கி நடை முறை புரிஞ்சிடும் ...

வங்கியோட முக்கிய பணி கடன் கொடுக்குறது ..இப்படி கடன் கொடுத்து வாங்க முதல் முதலா ஒரு வங்கி செயல் பட ஆரம்பிக்கும் போது பங்கு வெளியிட்டு திரட்டிய கொஞ்சம் மூலதனத்தோட ஆரம்பிப்பாங்க ... அப்புறம் தனிநபர் , நிறுவனங்கள் இவங்க கிட்ட இருந்து வைப்பு அதாவது டெபொசிட் வாங்கி ..அதைய கடனா கொடுக்க ஆரம்பிப்பாங்க ..இங்க தான் வில்லங்கம்  தொடங்குது ...

இப்படி வைப்பு அதாவது டெபொசிட் வாங்கி கடன் கொடுக்க ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் central bank ( நம்ப நாட்டுல - ரிசேர்வ் பேங்க் ஒப் இந்தியா RBI- RESERVE BANK OF INDIA  ) சில வரை முறைகள சொல்லுது ...அப்படி சொல்லுற வரையறை படிதான் நாட்டின் மத்த வங்கிங்க வேல செய்யும் ....

இப்படி மத்திய வங்கியால ( RBI- RESERVE BANK OF INDIA )சொல்லப்படும் முக்கியமான ஒரு வரையறை தான் இந்த fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடைமுறை ...அப்படி என்னா தான் சொல்லுறாங்க ....

அதாவது ஒரு வங்கி தன் கிட்ட ரிசர்வ்லா ( இருப்பு ) இருக்கும் பணத்த போல எத்தன மடங்கு கடன் கொடுக்கலாம் அப்படின்னு விதி முறை வகுக்குறாங்க ..

பொதுவா உலகம் முழுதும் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரையறை செய்யறாங்க ..இத தலைகீழா 1 சதவீத ரிசர்வ் ... 10 சதவீத அப்படின்னு சொல்லுவாங்க ..அதாவது ஒரு வங்கி கிட்ட 100 ரூபா இருக்குனா ..10 சதவீத ரிசர்வ் ( இருப்பு ) வரையறை படி ஆயிரம் ரூபா வரை அந்த வங்கி கடன் கொடுக்கலாம் ... 1 சதவீத ரிசர்வ் வரையறை படி 10,000 ரூபா கடன் கொடுக்கலாம் .....எப்படி இருக்கு இந்த திட்டம் ....

சுருக்கமா சொன்னா ..ஒவ்வொரு முறையும் கையிருப்பை போல்  எத்தன மடங்கு கடன் தரலாம் அப்படிங்கிறதுதான் இந்த fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடை முறை ...

( 300 வருசாம மெல்ல நகத்தி இன்னைக்கு உலகம் முழுதும் இந்த அடிபடையில தான் வங்கிகள் நடக்குது )

கீழ இருக்குற படத்த பாருங்க


இதுல அப்படி என்னத்த குத்தம் கண்டுபிடிச்சிட்டிங்க அப்படின்னு கேட்டா ...காத்துல கட்டுன கோட்டைதான் இந்த வங்கி முறை ....அத விட முக்கியம் இது உண்டாக்கும் பணம் ஒரு உலக மகா பொய் ...அது எப்படின்னு அடுத்த படத்த பாருங்க ....




மேலே உள்ள படத்துல முதல் பத்தியில் வங்கி / தனிநபர் அல்லது நிறுவனம் என்ற தலைப்பின் அடியில் A , B , C என்று உள்ளது ... இந்த A , B , C லாம் தனி நம்பர்களின் பெயர் அப்படின்னு கற்பனை பண்ணிக்கோங்க ..இப்ப A கிறவர்  1,00,000 ரூபாயை ஒரு வங்கியில் டெபொசிட் பண்ணுறார் ..அந்த டெபொசிட்ல 10 % ரூபாய் 10,000 வங்கி இருப்பா வச்சி கிட்டு மீதி 90,000 ரூபாயை கடனா கொடுக்குது ..( கடனா கொடுத்த ரூபாய்  செலவு செயப்படும் போது அது முடிவாக யாரோட பெயரிலாவது வங்கிக்கு வந்து தான் ஆகும் )

கடன் வாங்கினவர்கிட்ட   B கிற  வியாபாரி தன்னோட பொருள வித்து அந்த 90,000 ரூபாயை சம்பாதிக்கிறார்  திரும்ப வேறொரு வங்கியில்  B அந்த பணத்த டெபொசிட்  பண்ணுறார் ..இப்போ வங்கி திரும்பவும் அந்த டெபொசிட்ல 10 % ரூபாய் 9,000 வங்கி இருப்பா வச்சிக்கிட்டு மீதி 81,000 ரூபாயை கடனா  கொடுக்குது ..இப்படியே போய்கிட்டு இருக்கு ..

முடிவுல ...படத்த பாருங்க வங்கியில கடேசியாக பண்ணப்பட்ட டெபொசிட் + வங்கியில ( ரிசர்வ்ல ) இருப்புல இருக்குற மொத்த பணம் ரெண்டையும் கூட்டினா ..வங்கியில ஆரம்பத்தில் செய்யப்பட டெபொசிட் தொகை வருது ( மஞ்சள் நிறத்துல வேறுபடுத்தி காட்டியிருக்கேன் )...

வங்கிகள்  வெறும் 1,00,000 ரூபாயை டெபொசிட்டா வாங்கி கடனா கொடுத்த ரூபாய் 5,86,189 ரூபாய் உண்மையில கையிலிருந்த பணம் இல்லை ...அது வெறும் பொய் ....

இதே நிகழ்வ A , B , C கிறது நிறுவனங்கள் அப்படின்னு வச்சிக்கிட்டு பாருங்க ...

இதே நிகழ்வ A , B , C கிறது வெவ்வேறு வங்கிகள்னு வச்சிக்கிட்டு பாருங்க ...

இப்படி காத்துல உருவாக்கின பணத்த நம்பி நாம் சேமிக்கிறோம் , செலவு செய்யிறோம் , சம்பளம் வாங்குறோம் , முதலிடு பண்ணுறோம் ....இதுக்கு மேல வரி கட்டுறோம் ....இதுல ( inflation )  பண வீக்கம் அப்படிங்கிற மறைமுக வரி வேற.. இததான் பொருளாதார நிபுணர்கள் பண புழக்கம் ( money supply ) அப்படின்னு சொல்லுறாங்க ..

ஏதும் சந்தேகம் வந்தா ..கமெண்ட் போடுங்க ..விபரமா சொல்லுறேன்

அடுத்த பதிவுல ..ஒரு முறை செய்யப்பட்ட் டெபொசிடின் மீது இந்த பண சுழற்சி எவ்வளவு வரை போகும் , எந் எந்த நாட்டுல எவ்வளவு reserve நடை முறையில இருக்கு ...இதெல்லாம் விபரமா ....





6 comments:

  1. இப்ப A கிறவர்  1,00,000 ரூபாயை ஒரு வங்கியில் டெபொசிட் பண்ணுறார் ..அந்த டெபொசிட்ல 10 % ரூபாய் 10,000 வங்கி இருப்பா வச்சி கிட்டு மீதி 90,000 ரூபாயை கடனா கொடுக்குது ..( கடனா கொடுத்த ரூபாய்  செலவு செயப்படும் போது அது முடிவாக யாரோட பெயரிலாவது வங்கிக்கு வந்து தான் ஆகும் )/////// நுகர்வின் மூலமாக கடன் கொடுக்கப்பட்ட பணம் திரும்பவும் வங்கியில் யாரோ ஒருவர் மூலமாக டெபாசிட்டாக திரும்பவும் சேமிக்கப்படுகிறதுனு சொல்லீற்ங்களா ??கொஞ்சம் விளக்குங்கள் லாரன்ஸ்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. பணம் அப்படிங்கிறது கொதிக்கும் கூழாங்கல் மாதிரி ..தனிமனிதனோ , நிறுவனமோ யாரும் அதை ஒரே இடத்தில் வச்சிகிறது இல்ல ... ஒருத்தர் கையிலிருந்து இன்னொருத்தர் கையிக்கு போன உடனே அது அங்கேயிருந்து அடுத்தவர் கையுக்கு போயிடும் ...

      அப்படிதான் வங்கியும் ...அனேகமா நீங்க பணத்த வங்கில செலுதிட்டு வாங்கிய விட்டு வெளியே வரதுக்குள்ள அந்த பணம் கடனவோ இல்லன முதலீடாவோ உடனே வாங்கிய விட்டு வெளிய போயிடும் ...

      நாம பணத்த வங்கில நம்ப கணக்குல போட்டா வங்கி அத இருக்க பூட்டி பத்தரமா வச்சிக்கிட்டு ..நாம கேக்கும் போது கொடுக்கும்னு நாமெல்லாம் நம்புறது அடிப்படை புரிதல் தவறு ....வங்கிங்கிறது பணம் , பணம் சார்ந்த வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனம் ...பணத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பதுதான் அதனுடைய அடிப்படை மற்றும் மிக முக்கிய செயல்பாடு வீரா .....

      Delete
  2. பணச்சுழற்சி பொய்யினா நம்முடைய உழைப்பின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது

    ReplyDelete
  3. இன்னும் ஒரு ரெண்டு பதிவு போனதும் இதை பத்தி சொன்னா எளிதா புரியும் ..

    ReplyDelete
    Replies
    1. வங்கியில் போடப்படும் பணத்தின் சுழற்சியை அதாவது பணப்புழக்கத்தை பொய்யினு சொல்லுறீங்க ஓகே ஆனா முதல் முறையாக பணமாகத்தானே வங்கியில் டெபாசிட் செய்யப்படுவது அந்தப்பணம் எங்கிருந்து வருது.அதற்கு மதிப்பு எங்கிருந்து வருதுனு சொல்லுங்க

      Delete

எப்போய்

எப்போய்