நாபக கிணறு :
காலைலேயே என்னமோ திடிருன்னு எங்க பாட்டி நாபகம் வந்துச்சி ... எனக்கு நினைவு தெரிஞ்சி ரொம்ப கெம்பிரமான கிழவி ....
என் தாத்தாவுக்கு என் பாட்டி ( லீலா ப்ளோரா ) ரெண்டாவது மனைவி , பெரிய பாட்டி (ஆலிஸ் ஞானம்) தரங்கம்பாடில மிராசு வீட்டு பெண், கொஞ்சம் கர்வம், கொஞ்சம் திமிரு, கொள்ள அழகு ( வயசானபிறகும் ) ஒரு மிடுக்கு, ஒரு தோரணை எல்லாம் கலந்த செல்ல மகள் ..
எங்க தாத்தா (முருகன்) பட்டுகோட்டை பக்கம் அனைகாடு கிராமத்தில் சண்டியரா சுத்திகிட்டு இருந்தாப்ல , தாத்தாவோட அப்பா அவங்க முன்னோர்கள் எல்லாம் மன்னர் காலத்துல படைமுழங்கியா இருந்தார்களாம் ...
சரி நான் ஆரம்பிச்ச விசயத்துக்கு வரேன் ... எங்க தாத்தா முதல் கல்யாணம் பண்ணியபிறகும் மைனராவே சுத்திகிட்டு இருந்திருக்கார் ..அப்படி அடிக்கடி கும்பகோணம் வரும்போது எங்க பாட்டிய எங்க பாத்தாருன்னு தெரியல .... காதல் ...
ஒரு கட்டத்துல எங்க பெரிய பாட்டிக்கு ( இவங்களுக்கு எட்டு பிள்ளைங்க ) விசயம் தெரிஞ்சிபோச்சி ....நம்ப மைனர பஞ்சாயத்து பண்ணி ஊரவிட்டு தள்ளிட்டாங்க ....அவரும் காதலிய கட்டிக்கிட்டு கும்பகோணம் கோமானா ஆகிட்டாரு ...
எங்க பாட்டி உயர்நிலை பள்ளி ஆசிரியரா வேல பாத்து ( இவங்களுக்கு பத்து பிள்ளைங்க ) எங்க தாத்தா உள்பட பதினொரு உருப்படியையும் உருப்படியாகியிருகாங்க ...நம்ப மைனர் எங்கோ மெட்ராஸ் , மும்பைன்னு போய் யரோ ஒரு வாட்ச் மெக்கானிக்குகிட்ட வாட்சி சரி பண்ண கத்துகிட்டு ஊருக்கு வந்து தொழில ஆரம்பிச்சி இருக்கார் ...பழைய தஞ்சை மாவட்டதுள 60கள் வரைக்கும் மைனர் தான் பெரிய டெக்னிசியன் ...சம்பாதித்த காசெல்லாம் நம்ப மைனருக்கு கை செலவுக்கே போதலயாம்..
கோடை விடுமுறைக்கு எல்லா குடும்பமும் எங்க பாட்டி வீட்டுல பத்து பதினைந்து நாள் டேரா போடுவோம் ..
வீட்டு உள்முத்ததுல கெண்ட மீனுங்கள கருக்கலோட போய் வாங்கி வந்து பெரிய தண்ணி ட்ரம்ல விட்டு வச்சியிருப்பாங்க...நாங்க பொடுசுகள் எல்லாம் அத வேடிக்க பாக்கறதும் பெருசுக எங்கள விரட்டுரதுமா பத்து பத்தர மணியாகிடும் ... பாட்டி வந்து டேய்னு ஒரு சத்தம் போட்டதும் போதும் எல்லாபயலும் டக்குனு கானாபோயிடுவானுங்க ...
மே மாசத்து வெய்யில் வீனாபோகாம எங்க போடுசுகளிலேயே கொஞ்சம் வளர்ந்த பயலுவ கட்டய எடுத்துக்கிட்டு எங்களயும் கூட்டிகிட்டு காடோ சரணமோனு சுத்த கிளம்பினா ரெண்டு ரென்ற மணிக்கு பசியெடுக்கவும் வீட்டுக்கு வருவோம்..வீட்டுல எல்லா பெருசுகளும் சாப்பிட்டு முடிச்சி கத அளந்துகிட்டு இருக்கும் ..ஆனா பாட்டி நாங்க வந்ததும் கைல மாட்டின பயலுகள எங்கடா போய் பெரண்ட்ட்டு வரிங்கன்னு தொம்மு தொம்முன்னு முதுகுல நாலு சாத்தபோட்டும் ...
அடி வாங்கினவன் வாங்காதவன் எல்லாம் கைய கால கழிவிட்டு வெளிமுத்த தாழ்வாரத்துல அர வட்ட வடிவுல ஒக்கர்ருவோம் ..பாட்டி எங்க நடுவுள உக்காந்து ஒரு அன்ன கூடைல சோத்த போட்டு மீன் குழம்ப ஊத்தி கிளறி எங்க எல்லாருக்கு ஊருண்ட புடிச்சி கைல குடுக்கும் ..அதுலயும் எவனாவது உஸ் உறைகுது அப்படினு சொன்னா கடலெண்ண ஊத்தி பிசரிகொடுக்கும்...அப்படி ஒரு ருசியா இருக்கும்...
சாப்பாடு முடிஞ்சி எல்லாபயலும் வரிசைக்கா தாழ்வாரத்துல படுத்து தூங்கும் போது பாட்டி கட்டில்ல படுத்துகிட்டு சுருட்டு பிடிக்கும் ..அந்த சுருட்டு புகை வாசமும் நாட்டு ஓடு வழியா உள்ளிறங்கும் வெய்யில் சூடும் ...நாங்கெல்லாம் வேர்க்க வேர்க்க தூங்கி போவோம் ....
எங்க அம்மாவா இல்ல சின்ன அத்தையா யார் சொன்னாங்கனு தெரியல ..எங்க பாட்டி யோசன பண்ணா சுருட்டு பிடிக்கும்னாங்க ..நானும் பாட்டிய கவனிச்சி இருக்கேன் பாதி சுருட்ட திரும்ப எடுத்து புகைசிகிட்டே எங்கையோ பாத்துகிட்டிருக்கும் .. ஒரு தடவ மதியம் பாட்டி சுருட்டு புடிக்கும்போது நான் என்ன பாட்டி யோசிக்கிரனு கேட்டே புட்டேன் ..அப்பதான் எங்க பாட்டி சிரிச்சி நான் பாத்தேன் ...மெல்ல சிரிச்ச பாட்டி ஒன்னும் இல்லடா ..வா வந்து கட்டில்ல படுதுக்கோனு கூட படுக்க வச்சிகிச்சி ..கொஞ்ச நேரம் சுருட்டு புக கஷ்டமா இருந்துச்சி..நான் அப்படியே தூங்கிபோய்டேன் ...
பாட்டி சாகபோற ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு சாப்பாடு போட்டபோ கூட என் பக்கத்துலேயே உக்காந்து நான் சாப்பிட சாப்பிட எனக்கு சோத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா குழம்பு போட்டுச்சி ... அப்ப கூட ஏதோ யோசனயோட என்ன டா எப்படி படிக்கிற ..பாடம்லாம் புரியுதா அப்படின்னு கேட்டுச்சி ...
இப்ப கூட எனக்கு பாட்டிய நெனைக்கும் போது ... பாட்டி கிட்ட என்ன பாட்டி யோசிகிரனு கேக்கதோணுது .....
காலைலேயே என்னமோ திடிருன்னு எங்க பாட்டி நாபகம் வந்துச்சி ... எனக்கு நினைவு தெரிஞ்சி ரொம்ப கெம்பிரமான கிழவி ....
என் தாத்தாவுக்கு என் பாட்டி ( லீலா ப்ளோரா ) ரெண்டாவது மனைவி , பெரிய பாட்டி (ஆலிஸ் ஞானம்) தரங்கம்பாடில மிராசு வீட்டு பெண், கொஞ்சம் கர்வம், கொஞ்சம் திமிரு, கொள்ள அழகு ( வயசானபிறகும் ) ஒரு மிடுக்கு, ஒரு தோரணை எல்லாம் கலந்த செல்ல மகள் ..
எங்க தாத்தா (முருகன்) பட்டுகோட்டை பக்கம் அனைகாடு கிராமத்தில் சண்டியரா சுத்திகிட்டு இருந்தாப்ல , தாத்தாவோட அப்பா அவங்க முன்னோர்கள் எல்லாம் மன்னர் காலத்துல படைமுழங்கியா இருந்தார்களாம் ...
சரி நான் ஆரம்பிச்ச விசயத்துக்கு வரேன் ... எங்க தாத்தா முதல் கல்யாணம் பண்ணியபிறகும் மைனராவே சுத்திகிட்டு இருந்திருக்கார் ..அப்படி அடிக்கடி கும்பகோணம் வரும்போது எங்க பாட்டிய எங்க பாத்தாருன்னு தெரியல .... காதல் ...
ஒரு கட்டத்துல எங்க பெரிய பாட்டிக்கு ( இவங்களுக்கு எட்டு பிள்ளைங்க ) விசயம் தெரிஞ்சிபோச்சி ....நம்ப மைனர பஞ்சாயத்து பண்ணி ஊரவிட்டு தள்ளிட்டாங்க ....அவரும் காதலிய கட்டிக்கிட்டு கும்பகோணம் கோமானா ஆகிட்டாரு ...
எங்க பாட்டி உயர்நிலை பள்ளி ஆசிரியரா வேல பாத்து ( இவங்களுக்கு பத்து பிள்ளைங்க ) எங்க தாத்தா உள்பட பதினொரு உருப்படியையும் உருப்படியாகியிருகாங்க ...நம்ப மைனர் எங்கோ மெட்ராஸ் , மும்பைன்னு போய் யரோ ஒரு வாட்ச் மெக்கானிக்குகிட்ட வாட்சி சரி பண்ண கத்துகிட்டு ஊருக்கு வந்து தொழில ஆரம்பிச்சி இருக்கார் ...பழைய தஞ்சை மாவட்டதுள 60கள் வரைக்கும் மைனர் தான் பெரிய டெக்னிசியன் ...சம்பாதித்த காசெல்லாம் நம்ப மைனருக்கு கை செலவுக்கே போதலயாம்..
கோடை விடுமுறைக்கு எல்லா குடும்பமும் எங்க பாட்டி வீட்டுல பத்து பதினைந்து நாள் டேரா போடுவோம் ..
வீட்டு உள்முத்ததுல கெண்ட மீனுங்கள கருக்கலோட போய் வாங்கி வந்து பெரிய தண்ணி ட்ரம்ல விட்டு வச்சியிருப்பாங்க...நாங்க பொடுசுகள் எல்லாம் அத வேடிக்க பாக்கறதும் பெருசுக எங்கள விரட்டுரதுமா பத்து பத்தர மணியாகிடும் ... பாட்டி வந்து டேய்னு ஒரு சத்தம் போட்டதும் போதும் எல்லாபயலும் டக்குனு கானாபோயிடுவானுங்க ...
மே மாசத்து வெய்யில் வீனாபோகாம எங்க போடுசுகளிலேயே கொஞ்சம் வளர்ந்த பயலுவ கட்டய எடுத்துக்கிட்டு எங்களயும் கூட்டிகிட்டு காடோ சரணமோனு சுத்த கிளம்பினா ரெண்டு ரென்ற மணிக்கு பசியெடுக்கவும் வீட்டுக்கு வருவோம்..வீட்டுல எல்லா பெருசுகளும் சாப்பிட்டு முடிச்சி கத அளந்துகிட்டு இருக்கும் ..ஆனா பாட்டி நாங்க வந்ததும் கைல மாட்டின பயலுகள எங்கடா போய் பெரண்ட்ட்டு வரிங்கன்னு தொம்மு தொம்முன்னு முதுகுல நாலு சாத்தபோட்டும் ...
அடி வாங்கினவன் வாங்காதவன் எல்லாம் கைய கால கழிவிட்டு வெளிமுத்த தாழ்வாரத்துல அர வட்ட வடிவுல ஒக்கர்ருவோம் ..பாட்டி எங்க நடுவுள உக்காந்து ஒரு அன்ன கூடைல சோத்த போட்டு மீன் குழம்ப ஊத்தி கிளறி எங்க எல்லாருக்கு ஊருண்ட புடிச்சி கைல குடுக்கும் ..அதுலயும் எவனாவது உஸ் உறைகுது அப்படினு சொன்னா கடலெண்ண ஊத்தி பிசரிகொடுக்கும்...அப்படி ஒரு ருசியா இருக்கும்...
சாப்பாடு முடிஞ்சி எல்லாபயலும் வரிசைக்கா தாழ்வாரத்துல படுத்து தூங்கும் போது பாட்டி கட்டில்ல படுத்துகிட்டு சுருட்டு பிடிக்கும் ..அந்த சுருட்டு புகை வாசமும் நாட்டு ஓடு வழியா உள்ளிறங்கும் வெய்யில் சூடும் ...நாங்கெல்லாம் வேர்க்க வேர்க்க தூங்கி போவோம் ....
எங்க அம்மாவா இல்ல சின்ன அத்தையா யார் சொன்னாங்கனு தெரியல ..எங்க பாட்டி யோசன பண்ணா சுருட்டு பிடிக்கும்னாங்க ..நானும் பாட்டிய கவனிச்சி இருக்கேன் பாதி சுருட்ட திரும்ப எடுத்து புகைசிகிட்டே எங்கையோ பாத்துகிட்டிருக்கும் .. ஒரு தடவ மதியம் பாட்டி சுருட்டு புடிக்கும்போது நான் என்ன பாட்டி யோசிக்கிரனு கேட்டே புட்டேன் ..அப்பதான் எங்க பாட்டி சிரிச்சி நான் பாத்தேன் ...மெல்ல சிரிச்ச பாட்டி ஒன்னும் இல்லடா ..வா வந்து கட்டில்ல படுதுக்கோனு கூட படுக்க வச்சிகிச்சி ..கொஞ்ச நேரம் சுருட்டு புக கஷ்டமா இருந்துச்சி..நான் அப்படியே தூங்கிபோய்டேன் ...
பாட்டி சாகபோற ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு சாப்பாடு போட்டபோ கூட என் பக்கத்துலேயே உக்காந்து நான் சாப்பிட சாப்பிட எனக்கு சோத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா குழம்பு போட்டுச்சி ... அப்ப கூட ஏதோ யோசனயோட என்ன டா எப்படி படிக்கிற ..பாடம்லாம் புரியுதா அப்படின்னு கேட்டுச்சி ...
இப்ப கூட எனக்கு பாட்டிய நெனைக்கும் போது ... பாட்டி கிட்ட என்ன பாட்டி யோசிகிரனு கேக்கதோணுது .....
No comments:
Post a Comment