Monday, October 14, 2013

பீதோவான்



காதே கேக்காதவருக்கு இசை எப்படி புரிந்தது ...?
பீதோவான் ......
ஒரு ஆச்சிரிய புதிர் ....

பிறந்தது 17 டிசெம்பர் 1770 , மறைந்தது 26 மார்ச் 1827 ...ரோமர் பாணி இசையிலிருந்து மேலையிசையை நவீன காலத்திற்கு கொண்டு வந்தவர்களில் இவர் மிக முக்கியமானவர் ...இவரது அழியா புகழ் பெற்ற படைப்புகள் இன்றளவும் உலக மேலை இசையை கட்டுண்டு வைத்திருக்கிறது ...

27 வயதில் தனது கேட்க்கும் திறனை இழந்துவிட்ட பீதோவான் அதன் பின் தான் தனது பிரமிக்க வைக்கும் சிம்பனிகளை உருவாக்கினார் ...

மூளைக்குள்ளாக சத்தத்தை நாம் கண்டு உணர முடியும் அந்த சத்தங்களை மீண்டும் மீண்டும் பலமாதிரி கொட்டி கலந்து உருவாக்கி ...இசை....இசை சரங்கள் ....

இசை சரங்கள் அப்படினா .....எந்த எந்த சத்தங்களை எவ்வளவு முறை அடுக்கி ...எந்த வரிசையில்....அழுத்தமா ..சத்தமா...எவ்வளவு நீளத்திற்கு... மெல்ல , சத்தமா , நீட்சியா .....இப்படி ஒரு தொகுப்பா .... போர்முலா மாதிரி உருவாக்கி அதை எழுதி வைத்தால் அது தான் இசை சரங்கள் ...

...உங்களிடம் ஹெட் போன் இருந்தால் இந்த விடியோவை கேளுங்கள் 


வீடியோவில் வரும் இசை பீதோவனின் ஐந்தாவது சிம்போனி ...இந்த இசை சரங்களை உருவாக்கும்போது பிதோவான் கிட்ட தட்ட கேட்கும் திறனை முழுதும் இழந்துவிட்டார் ...



சத்தங்கள் இப்படி மூளைக்குள் உருவாக்கி அதை ( கற்பனை பண்ணி ) பலமாதிரி கலந்து வித்தை காட்ட ரொம்ம்ம்ப நாபக ஆற்றலும் ...ஏகப்பட்ட கவனமும் வேண்டும் ...

ஒருமுறை தனது ஒன்பதாவது சிம்பனியை இசைத்து விட்டு ....திரும்பி பார்வையாளர்களை பார்த்த பீதோவான் ....எழுந்தது நின்று கரவொலி எழுப்பிகொண்டிருந்த பார்வையாளர்களின் மவ்ன கை தட்டலை பார்த்து கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாராம்....

பல நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து இசை சரங்களை உண்டு பண்ணும் போது தூக்கம் வராமல் இருக்க தண்ணிர் உள்ள வாளியில் தலையை பல நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைத்திருப்பாராம் இந்த பழக்கம் கூட அவரது கேட்கும் திறனை அழித்திருக்கும் என்று நினைத்தார்கள் ...

தனது நண்பர்களுடன் பேசுவதற்கு அவர் பயன் படுத்திய நோட்டு புத்தகம் அவரது உணர்சிகரமான் மன நிலையை இப்போதும் படிபவருக்கு உணர்த்துவதாக இருக்கிறது அவரது நண்பர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதை அந்த நோட்டு புத்தகத்தில் எழுதி காட்ட அதை படித்து தனது பதிலை பிதோவான் அதில் எழுதுவார் ...

பல பெண்கள் இவரை விரும்பிய போதும் ..இவர் விரும்பிய பிரபுக்கள் பரம்பரையை சேர்ந்த இவரது காதலியை பிதோவானால் சமூக ஏற்ற தாழ்வால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை ...

தனது சகோதரர் மீது அளவில்லா அன்பை வைத்திருந்தார் ....தனது சகோதரரின் இறப்புக்கு பின் அவரது மகனை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார் ...

காது கேளாமை , அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் வறுமை , தனிமை , பலவகை நோய்கள் ...இப்படி பல இடர்பாடுகள் இருந்த போதும் அவற்றுக்கு மத்தியில் பீதோவான் படைத்த இசை சரங்கள் அவர் இசை வழியே வாழ்ந்திருக்கிறார் என்பதை இன்றும் பறை சாற்றி கொண்டுள்ளன  ...

சரி இதெல்லாம் இருக்கட்டும் ...எங்க நீங்க இப்ப உங்க காத நல்லா மூடிக்கிட்டு மனசுக்குள்ள அதாங்க மூளைக்குள்ள சத்தத்தை உருவாக்கி ஒரு சுரம் எழுதுங்க பார்ப்போம் ....என்ன ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் வரும் ஆனா சுவாரசியமா இருக்கும் .... ட்ரை பண்ணுங்க ......போக போக நேரம் போறதே தெரியாது ....


1 comment:

  1. அருமையான பதிவு லாரன்ஸ் .பீத்தோவன் காது கேளாமல் போனபிறகும் சிம்பொனி அமைத்தார் என்பது நம்ப முடியாததாகவும் அதே வேளையில் ஆச்சரியத்தையும் அளிக்கிறது .பீத்தோவன் என்றும் வாழ்வார்.

    ReplyDelete

எப்போய்

எப்போய்