Thursday, May 8, 2014

கரும் விடியல், அத்தியாயம் 1 - வேட்டை தொடர்ச்சி...





ஓநாயும் எழுந்து கொண்டு தத்ரோவ்சிஸ்கியை பார்த்தவரே முன்னம் பற்கள் தெரிய ஊரும்மிய படி பக்கவாட்டில் நகர்ந்து அவன் மீதி பாய தயாரானது ....

தத்ரோவ்சிஸ்கியின் பலகீனமானா நொடியில் அவனை தாக்க அவனது நகர்வை கவனித்தபடி வெறியுடன் பாய தயாரானது அந்த ஓநாய் ... எந்த கணமும் ஆறடி நீளமும் நான்கடி உயரமும் இருந்த அந்த ஓநாய் தன்னை தாக்கும் என்பதை உணர்ந்த தத்ரோவ்சிஸ்கி வெலவெலத்து போய் தப்பி  ஓட வழி தெரியாமல் சற்று குனிந்தவாறே ஒரு கையில் கத்தியுடன் ஓநாயை எதிர் கொள்ள தயாரானான் ...

ஓநாயை பார்த்தபடி இருந்த தத்ரோவ்சிஸ்கியை சற்றும் எதிர் பாரா தருணத்தில் யாரோ சடேரென் அவன் மேல் சட்டையை பிடித்து பின்னுக்கு இழுத்தனர் .... இழுபட்ட வேகத்தில் இரண்டு மூன்று அடி பின்னுக்கு எகிறி போய் விழுந்த தத்ரோவ்சிஸ்கி தனக்கு முன்னால் அவனுக்கும் ஓநாயிக்கும் இடையே அந்த கருப்பு அங்கி மனிதன் நின்றுகொண்டு அந்த ஓநாயை உற்று பார்த்தபடி எதோ முனுமுனுப்பதை பார்த்தான் ...

இது என்ன விசித்திரம் கொலை வெறியுடன் இருந்த அந்த  ஓநாயின் முகம் வெறி தணிந்து அதன் கண்கள் ஏதோ பரிதாபத்துடன் பார்ப்பது போல் மாறிவிட்டதே என்று தத்ரோவ்சிஸ்கி கவனித்து கொண்டிருந்தபோதே ... அந்த ஓநாய் சட்டென்று சில அடிகள் பின் வாங்கி அப்படியே திரும்பி ... அடிபட்டது போன்று பலகீனமாக கத்திகொண்டே மலைமுகட்டை நோக்கி ஓடிபோயிற்று ...


நடந்தது என்ன ? எப்படி ? என தத்ரோவ்சிஸ்கி ஒன்றும் புரியாமல் மெல்ல எழுந்தவாரு அந்த கருப்பு அங்கி மனிதனை பார்த்து கொண்டிருந்தபோது மெல்ல தத்ரோவ்சிஸ்கி பக்கம் திரும்பிய அந்த கருப்பு அங்கி மனிதனின் முகம் ஒருவிதமான இறுக்கத்துடன் வெளிரி போயிருந்தது ...ஆனால் அந்த கண்கள் அப்பப்பா ..ஒரு இருபது கிலோ சுத்தியலால் அடித்தது போன்று அப்படி ஒரு கனமான பார்வை ... சில வினாடிகள் அந்த கண்களை பார்த்து கொண்டிருந்த தத்ரோவ்சிஸ்கி எதோ இனம்புரியாத இறுக்கத்தை உணர்ந்தான் ..

கொஞ்சம் நகர்ந்து கால்களை உறுதியாக ஊன்றி கொள்ள முயற்சித்தபோது எவ்வளவு முயன்றும் தன்னால் ஒரு அடி கூட நகர முடியவில்லை என்பதையும் ..தான் முற்றிலும் செயலிழந்து தன் முகத்தை கூட திருப்ப முடியாமல் உரைய்ந்து போய் நிற்பதையும் 
தத்ரோவ்சிஸ்கி உணர்ந்தான் .. 

மெல்ல சில அடிகள் அவனை நெருங்கி வந்த அந்த மனிதன் சில நொடிகள் அவனையே பார்த்து கொண்டிருந்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் ... சுமார் பத்தடி விலகி சென்றதும் திரும்பி 
தத்ரோவ்சிஸ்கியை பார்த்த அந்த மனிதன்  செயின்ட் பீட்டர்ஸ் பார்கில் சந்திப்போம் இப்போது நீ வீட்டுக்கு போகலாம் என் கூறிவிட்டு மீண்டும் நடக்க தொடங்கினான் ...

சட்டென்று அடைபட்ட இறுக்கமான பெட்டியிலிருந்து வெளிவந்தது போன்று உணர்ந்த தத்ரோவ்சிஸ்கிக்கு தொண்டை உலர்ந்து போயிருந்தது .. சைபீரிய கடும் பனி குளிரிலும் தன் உடல் முழுதும் கணப்படுப்பிற்கு அருகில் இருந்தது போன்று வெம்மைமையானதை உணர்தான் ...





2 comments:

  1. நல்ல விறுவிறுப்பாக செல்கிறது கதை .தொடர்ந்து அதிக நாட்கள் இடைவெளி விடாமல் எழுதுங்கள்.எழுத்துப் பிழையை கவனத்தில் கொண்டு எழுதுங்கள் லாரன்ஸ்.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. சரிங்க வீரா ..

    ReplyDelete

எப்போய்

எப்போய்