ஹிக்ஸ் போசோன் எனும் கடவுள் துகள்
கொஞ்சநாளுக்கு முன்னாடி கடவுள் துகள் அப்படின்னு எதோ கண்டுபிடிச்சிருக்காங்க அப்படின்னு ஏக பரபரப்பா செய்திகள் வந்துகிட்டு இருந்துச்சே நாபகம் இருக்கா ....அது என்ன கடவுள் துகள் ...கடவுளையே துகள் வடிவத்துல கண்டுபிடிச்சிட்டாங்களா ...இல்ல கடுவுள் வச்சியிருந்த துகளை கண்டுபிடிச்சிட்டாங்களா ..என்ன இது ...ஹிக்ஸ் போசோன் பெயர் எப்படி வந்துச்சி .....
இந்த சேதிதான் என்ன ...
1924 பெங்கால் மாகாணம் ..கொல்கத்தா நகரம் ....சோனு கொட்டிகிட்டு இருந்த பருவ மழையில் ரோடு முழுக்க ஓடிகொண்டிருந்த மழை தண்ணி சத சதக்க ஓட்டி வந்த சய்கில வீட்டு முன் வாசல் செவத்தோட நிக்கவச்சிட்டு பர பரக்க உள்ள வந்தார் 30 வயசான சத்தியேந்திர நாத் போஸ் ..
இளம் கணித மேதை ...இங்க பரு இங்க பரு அப்படின்னு தன்னோட மனைவிகிட்ட அந்த ஜேர்மன் சஞ்சிகையை காட்டி ஏக மகிழ்ச்சில அதுல வந்திருந்த ஒரு கட்டுரைய காட்டினர் ....அவர் மனைவிக்கு அதுல என்ன எழுதியிருக்குன்னு சுத்தமா புரியல ஆனா நிச்சயம் தன்னோட கணவரோட ஆராய்ச்சி பத்தி எதோ வந்திருக்குன்னு மட்டும் புரிஞ்சி மகிழ்ச்சி அடைஞ்சாங்க ....
அப்படி என்ன அதுல வந்திருந்துச்சி ...
போன நூற்றாண்டு தொடக்கத்துல தான் குவாண்டம் இயற்பியல் பத்தி உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடக்க ஆரம்பிச்சி இருந்தது ..1920கல இந்த ஆராய்ச்சிகளின் வழியா கொஞ்சம் கொஞ்சமா அணுவுக்குள் இருக்கும் அதிசய உலகம் வெளிய தெரிய ஆரம்பிச்சது ...( அதாவது ஒரு அணுவின் அடிப்படை துகள்களாகிய , எலக்ட்ரான் , ப்ரோட்டான் , நியுட்ரான் இவைகள இன்னும் பொடுசு பொடுசா உடச்சி உள்ள பார்க்குற ஆராய்ச்சிக்கு தான் குவாண்டம் இயற்பியல் அப்படின்னு சொல்லுறாங்க )..
இப்படி நடந்துகிட்டு வந்த ஆராய்சிகளில் போட்டான் போன்ற குவாண்டம் துகள்கள் எப்படி வேலை செய்யுது அப்படிங்கிறது ரொம்பவே உலக ஆராய்ச்சியாளர்களை மண்டைய பிச்சிக்க செஞ்சுது ....( அண்டம் பத்தி நான் சொல்லிட்டு வந்தப்ப அதுல வெளிச்சம் அப்படிங்கிறது போட்டான் அப்படிங்கிற துகள்களால்/ சக்தி பொட்டலங்கலால் ஆனது அப்படின்னு சொன்னது நினைவிருக்கும் ) இந்த போட்டான் மாதிரியான துகள்களை எப்படி வரையறை பண்ணுறது அப்படிங்கிறது தான் சத்தியேந்திர நாத் போஸ் ..
செஞ்ச ஆராய்ச்சி ...
அதாவது சரியா சொல்லனும்னா ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இந்த அடிப்படை துகள்களை எப்படி சம அளவு உள்ள பல பிரிவாக பிரிப்பது அப்படிங்கிறதுதான் இவரோட ஆராய்ச்சி ...
உதாரணதிற்கு உங்க கிட்ட A , B அப்படின்னு ரெண்டு போட்டன் இருக்கு உங்க முன்னாடி மேசையில ஒரு கருப்பு தட்டும் ஒரு சிவப்பு தட்டும் இருக்கு இப்ப உங்க கிட்ட இருக்குற ரெண்டு போட்டானையும் எத்தன மாதிரி அந்த ரெண்டு தட்டுலையும் வைக்கலாம் அப்படின்னு யோசிச்சப்ப... ..ஒன்னு A , B ரெண்டையும் கருப்பு தட்டுல வச்சிட்டு சிவப்பு தட்ட வெறுமனே விட்டுடலாம் , இல்லாட்டி A , B ரெண்டையும் சிவப்பு தட்டுல வச்சிட்டு கருப்பு தட்ட வெறுமனே விட்டுடலாம் , அப்படியும் இல்லாட்டி A வ கருப்பு தட்டுலயும் B ய சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் .. அப்புறம் B ய கருப்பு தட்டுலயும் A வ சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் ..இத்தனை வாய்ப்பு இருப்பதா மேலோட்டமா பார்த்தா தெரியுது ...
ஆனா இங்க தான் இயற்கை ஒரு முரன காட்டுது அதாவது ஒரு போட்டானுக்கும் இன்னொரு போட்டானுக்கும் நம்மால வித்தியாச படுத்தி பாக்க முடியாது என்பதால கடேசிய சொன்ன ரெண்டு வழியும் ஒன்னு தான் அப்படின்னு வச்சிக்கணும் ....இந்த புரிதல விரிவா ஆராய்ச்சி பண்ணி தன்னோட ஆராய்ச்சியை யாராவது மிக சிறந்த விஞ்ஞானி கிட்ட காட்டி கருத்து கேக்கணும் அப்படின்னு முடிவு பண்ணப்ப ...கேக்குறதுதான் கேக்குறோம் நேரடியா ஐன்ஸ்டின் கிட்டவே கேப்போம் அப்படின்னு முடிவு பண்ணிட்டார் சத்தியேந்திர நாத் போஸ் ....தனது ஆராய்ச்சியை அப்படியே ஐன்ஸ்டினுக்கு அனுப்பி வச்சார் .....
தினமும் குறைஞ்சது 5 கொயர் பேப்பராவது உலகத்தயே கிடிகிடுக்க வய்க்க போகும் கண்டுபிடிப்பு அப்படின்னு சொல்லி கட்டு கட்டா ஐன்ஸ்டினுக்கு வரும் ...அப்படி எனனா தான் இருக்குனு பார்த்தா கடேசில புஸ்ஸுன்னு போயிடும் ....
அப்படி ஒரு நாள் .......
கடிதத்தை படிச்ச பின்னாடி சத்தியேந்திர நாத் போஸ் யார்னு விசாரித்து தெரிஞ்ச்சிகிட்ட ஐன்ஸ்டின் ...கட்டுரையை படிக்கவும் ..இது ஒன்னும்தெரியாத ஒருத்தர் எழுதினது இல்லை அப்படின்னு புரிஞ்சிகிட்டார் .... அந்த கட்டுரையில் சொல்லியிருந்த ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்தி தனது கருத்துகளுடன் போஸ்ஸின் பெயரிலேயே ஜெர்மன் மொழியில் கட்டுரை வெளிவர செஞ்சார் .... இப்பவும் போஸ் வெளிக்கொண்டு வந்த இந்த முறை போஸ்-ஐன்ஸ்டின் புள்ளியியல் விதி அப்படினே அழைக்கபடுது ....
இந்த விதி ஒன்ன ஒன்னு வித்தியாச படுத்தி பாக்கமுடியாத குவாண்டம் துகள்களை தனிதனியா ஆராய்ச்சி பண்ணி விடைகளை கண்டுபிடிகிறத விட சராசரி ( law of averages ) மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணுறத வரையறை செய்யுது ...இந்த விதியின் வரையறைக்குள் வரும் துகள்களை போசோன் துகள்கள் அப்படின்னு போஸின் பெயரை வச்சாங்க ...
குவாண்டம் உலகத்துல இது வரை கண்டு பிடிச்ச துகள்கள் எல்லாம் ரெண்டு வகைல அடங்கிடுது ஒன்னு போசோன் இன்னொன்னு பெர்மியான்ஸ் ...
இந்த பெர்மியான்ஸ் அப்படிங்கிற பேரு அந்த வகைகளை கண்டுபிடிச்ச இத்தாலி நாட்டு ஆராய்ச்சியாளர் என்ரிகோ பெர்மி அப்படிங்கிரவரோட பேரையே வச்சுட்டாங்க ...
தொடர்ந்த ஆராய்சிகளில் இயற்கையின் சில விதிகள் நமக்கு புரியவந்துச்சி ..அதாவது பெர்மியான்ஸ் துகள்கள் , போசோன் துகள்கள் மூலமாதான் ஒன்றை ஒன்று வினை புரியுதுங்கிற விசயம் புரிஞ்சது ...எப்படினா
எப்படிங்கிரதையும் ..... ஹிக்ஸ்ங்கிற பேர் எப்படிவந்துச்சி ....எத்தன வருசமா இந்த ஆராய்ச்சி நடக்குது ....யார் பண்ணுறா ...இன்னும் நம்ம ஆச்சரிய பட வைக்கும் நெறைய சேதி அடுத்த பதிவுல ...
தொடர்து படிங்க ..கையோட உங்க கருத்துகள கமெண்ட் போடுங்க ...உங்க கமெண்ட் இன்னும் சிறப்பா பதிவுகள் வர உதவி செய்யும் ....
1924 பெங்கால் மாகாணம் ..கொல்கத்தா நகரம் ....சோனு கொட்டிகிட்டு இருந்த பருவ மழையில் ரோடு முழுக்க ஓடிகொண்டிருந்த மழை தண்ணி சத சதக்க ஓட்டி வந்த சய்கில வீட்டு முன் வாசல் செவத்தோட நிக்கவச்சிட்டு பர பரக்க உள்ள வந்தார் 30 வயசான சத்தியேந்திர நாத் போஸ் ..
இளம் கணித மேதை ...இங்க பரு இங்க பரு அப்படின்னு தன்னோட மனைவிகிட்ட அந்த ஜேர்மன் சஞ்சிகையை காட்டி ஏக மகிழ்ச்சில அதுல வந்திருந்த ஒரு கட்டுரைய காட்டினர் ....அவர் மனைவிக்கு அதுல என்ன எழுதியிருக்குன்னு சுத்தமா புரியல ஆனா நிச்சயம் தன்னோட கணவரோட ஆராய்ச்சி பத்தி எதோ வந்திருக்குன்னு மட்டும் புரிஞ்சி மகிழ்ச்சி அடைஞ்சாங்க ....
அப்படி என்ன அதுல வந்திருந்துச்சி ...
போன நூற்றாண்டு தொடக்கத்துல தான் குவாண்டம் இயற்பியல் பத்தி உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடக்க ஆரம்பிச்சி இருந்தது ..1920கல இந்த ஆராய்ச்சிகளின் வழியா கொஞ்சம் கொஞ்சமா அணுவுக்குள் இருக்கும் அதிசய உலகம் வெளிய தெரிய ஆரம்பிச்சது ...( அதாவது ஒரு அணுவின் அடிப்படை துகள்களாகிய , எலக்ட்ரான் , ப்ரோட்டான் , நியுட்ரான் இவைகள இன்னும் பொடுசு பொடுசா உடச்சி உள்ள பார்க்குற ஆராய்ச்சிக்கு தான் குவாண்டம் இயற்பியல் அப்படின்னு சொல்லுறாங்க )..
இப்படி நடந்துகிட்டு வந்த ஆராய்சிகளில் போட்டான் போன்ற குவாண்டம் துகள்கள் எப்படி வேலை செய்யுது அப்படிங்கிறது ரொம்பவே உலக ஆராய்ச்சியாளர்களை மண்டைய பிச்சிக்க செஞ்சுது ....( அண்டம் பத்தி நான் சொல்லிட்டு வந்தப்ப அதுல வெளிச்சம் அப்படிங்கிறது போட்டான் அப்படிங்கிற துகள்களால்/ சக்தி பொட்டலங்கலால் ஆனது அப்படின்னு சொன்னது நினைவிருக்கும் ) இந்த போட்டான் மாதிரியான துகள்களை எப்படி வரையறை பண்ணுறது அப்படிங்கிறது தான் சத்தியேந்திர நாத் போஸ் ..
செஞ்ச ஆராய்ச்சி ...
அதாவது சரியா சொல்லனும்னா ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இந்த அடிப்படை துகள்களை எப்படி சம அளவு உள்ள பல பிரிவாக பிரிப்பது அப்படிங்கிறதுதான் இவரோட ஆராய்ச்சி ...
உதாரணதிற்கு உங்க கிட்ட A , B அப்படின்னு ரெண்டு போட்டன் இருக்கு உங்க முன்னாடி மேசையில ஒரு கருப்பு தட்டும் ஒரு சிவப்பு தட்டும் இருக்கு இப்ப உங்க கிட்ட இருக்குற ரெண்டு போட்டானையும் எத்தன மாதிரி அந்த ரெண்டு தட்டுலையும் வைக்கலாம் அப்படின்னு யோசிச்சப்ப... ..ஒன்னு A , B ரெண்டையும் கருப்பு தட்டுல வச்சிட்டு சிவப்பு தட்ட வெறுமனே விட்டுடலாம் , இல்லாட்டி A , B ரெண்டையும் சிவப்பு தட்டுல வச்சிட்டு கருப்பு தட்ட வெறுமனே விட்டுடலாம் , அப்படியும் இல்லாட்டி A வ கருப்பு தட்டுலயும் B ய சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் .. அப்புறம் B ய கருப்பு தட்டுலயும் A வ சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் ..இத்தனை வாய்ப்பு இருப்பதா மேலோட்டமா பார்த்தா தெரியுது ...
ஆனா இங்க தான் இயற்கை ஒரு முரன காட்டுது அதாவது ஒரு போட்டானுக்கும் இன்னொரு போட்டானுக்கும் நம்மால வித்தியாச படுத்தி பாக்க முடியாது என்பதால கடேசிய சொன்ன ரெண்டு வழியும் ஒன்னு தான் அப்படின்னு வச்சிக்கணும் ....இந்த புரிதல விரிவா ஆராய்ச்சி பண்ணி தன்னோட ஆராய்ச்சியை யாராவது மிக சிறந்த விஞ்ஞானி கிட்ட காட்டி கருத்து கேக்கணும் அப்படின்னு முடிவு பண்ணப்ப ...கேக்குறதுதான் கேக்குறோம் நேரடியா ஐன்ஸ்டின் கிட்டவே கேப்போம் அப்படின்னு முடிவு பண்ணிட்டார் சத்தியேந்திர நாத் போஸ் ....தனது ஆராய்ச்சியை அப்படியே ஐன்ஸ்டினுக்கு அனுப்பி வச்சார் .....
தினமும் குறைஞ்சது 5 கொயர் பேப்பராவது உலகத்தயே கிடிகிடுக்க வய்க்க போகும் கண்டுபிடிப்பு அப்படின்னு சொல்லி கட்டு கட்டா ஐன்ஸ்டினுக்கு வரும் ...அப்படி எனனா தான் இருக்குனு பார்த்தா கடேசில புஸ்ஸுன்னு போயிடும் ....
அப்படி ஒரு நாள் .......
" மதிப்பிற்கு உரிய அய்யா , இத்துடன் எனது கட்டுரையை உங்கள் மேலான கருத்துக்களுக்கும் , ஆவன செய்யும் பொருட்டும் துணிந்து அனுப்பி உள்ளேன் ... இது குறித்து உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .......மேலும் எனக்கு அவ்வளவாக ஜெர்மன் மொழி தெரியாது எனவே இதனை மொழிபெயர்க்க இயலவில்லை .......இந்த கட்டுரைக்கு பிரசுரிக்கப்படும் தகுதி இருப்பின் இதனை ஜெர்மன் மொழியில் பிரசுரிக்க ஆவன செய்யும்படி வேண்டி கொள்கிறேன் .....
என்னை யாரென்றே உங்களுக்கு தெரியாத போதும் இந்த உதவியை உங்களிடம் கேட்பதில் எனக்கு தயக்கம் இல்லை ...ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் உங்கள் மாணவர்கள் உங்களிடம் பாடம் பயின்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மூலம் கற்று கொண்டதனால் பயன் அடைந்தவர்கள் ...
சில காலங்களுக்கு முன் உங்களுடைய சார்பியல் கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிட கல்கட்டாவிலிருந்து உங்களிடம் அனுமதிகேட்கப்பட்டது நீங்களும் அதற்கு சம்மதித்து இருந்தீர்கள் .உங்களுக்கு இன்றும் நினைவிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை .... உங்களுடைய சார்பியல் கட்டுரைகள் மொழி பெயர்க்க பட்டு புத்தகமாக இங்கு வெளிவந்துள்ளது ..அதனை மொழி பெயர்த்தவன் நான் தான் ..."இப்படி ஒரு கடிதத்துடன் சத்தியேந்திர நாத் போஸின் ஆராய்ச்சி கட்டுரை ஐன்ஸ்டினை வந்தடைந்தது ....
கடிதத்தை படிச்ச பின்னாடி சத்தியேந்திர நாத் போஸ் யார்னு விசாரித்து தெரிஞ்ச்சிகிட்ட ஐன்ஸ்டின் ...கட்டுரையை படிக்கவும் ..இது ஒன்னும்தெரியாத ஒருத்தர் எழுதினது இல்லை அப்படின்னு புரிஞ்சிகிட்டார் .... அந்த கட்டுரையில் சொல்லியிருந்த ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்தி தனது கருத்துகளுடன் போஸ்ஸின் பெயரிலேயே ஜெர்மன் மொழியில் கட்டுரை வெளிவர செஞ்சார் .... இப்பவும் போஸ் வெளிக்கொண்டு வந்த இந்த முறை போஸ்-ஐன்ஸ்டின் புள்ளியியல் விதி அப்படினே அழைக்கபடுது ....
இந்த விதி ஒன்ன ஒன்னு வித்தியாச படுத்தி பாக்கமுடியாத குவாண்டம் துகள்களை தனிதனியா ஆராய்ச்சி பண்ணி விடைகளை கண்டுபிடிகிறத விட சராசரி ( law of averages ) மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணுறத வரையறை செய்யுது ...இந்த விதியின் வரையறைக்குள் வரும் துகள்களை போசோன் துகள்கள் அப்படின்னு போஸின் பெயரை வச்சாங்க ...
குவாண்டம் உலகத்துல இது வரை கண்டு பிடிச்ச துகள்கள் எல்லாம் ரெண்டு வகைல அடங்கிடுது ஒன்னு போசோன் இன்னொன்னு பெர்மியான்ஸ் ...
இந்த பெர்மியான்ஸ் அப்படிங்கிற பேரு அந்த வகைகளை கண்டுபிடிச்ச இத்தாலி நாட்டு ஆராய்ச்சியாளர் என்ரிகோ பெர்மி அப்படிங்கிரவரோட பேரையே வச்சுட்டாங்க ...
தொடர்ந்த ஆராய்சிகளில் இயற்கையின் சில விதிகள் நமக்கு புரியவந்துச்சி ..அதாவது பெர்மியான்ஸ் துகள்கள் , போசோன் துகள்கள் மூலமாதான் ஒன்றை ஒன்று வினை புரியுதுங்கிற விசயம் புரிஞ்சது ...எப்படினா
எப்படிங்கிரதையும் ..... ஹிக்ஸ்ங்கிற பேர் எப்படிவந்துச்சி ....எத்தன வருசமா இந்த ஆராய்ச்சி நடக்குது ....யார் பண்ணுறா ...இன்னும் நம்ம ஆச்சரிய பட வைக்கும் நெறைய சேதி அடுத்த பதிவுல ...
தொடர்து படிங்க ..கையோட உங்க கருத்துகள கமெண்ட் போடுங்க ...உங்க கமெண்ட் இன்னும் சிறப்பா பதிவுகள் வர உதவி செய்யும் ....
சராசரி ( law of averages ) மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணுறத வரையறை செய்யுது ...இந்த விதியின் வரையறைக்குள் வரும் துகள்களை போசோன் துகள்கள் அப்படின்னு போஸின் பெயரை வச்சாங்க ...//////////இதை கொஞ்சம் விளக்குங்கள் லாரன்ஸ்
ReplyDeleteஎளிய முறையில் அருமையான விளக்கம் /பதிவு
ReplyDelete