Tuesday, November 5, 2013

கடவுள் துகள் - பதிவு 3



போன பதிவுல , ஜூலை 4 , 2012 "  CERN  "  அப்படிங்கிற அணு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய கூட்டு நிறுவனம் (The European Organization for Nuclear Research, (CERN) ஹிக்ஸ் போசோன் துகள கண்டு பிடிச்சுட்டதா அறிவிச்சாங்க அப்படின்னு சொன்னேன் ... இந்த துகளுக்கு  கடவுள் துகள் அப்படின்னு பேரு வந்த கதை இப்போ 

பல வருசமா எல்லா விஞ்ஞானிகளுக்கும் தண்ணி காட்டிகிட்டு இருந்த இந்த ஹிக்ஸ் போசோன் துகள பத்தி லியோன் லெதர்மன் ( Leon Lederman ) அப்படிங்கிற ஆராய்ச்சியாளர் ஒரு புத்தகம் எழுதினார் தனக்கு இருந்த ஆதங்கத்த காட்டும் விதமா  போக்கிரி துகள் " GODDAMN PARTICLE " அப்படின்னு தன்னோட புத்தகத்துக்கு பெயர் வைக்க முடிவு பண்ணினார் ...


இப்படிலாம் பேரு வச்சா புத்தகம் விலை போகாது அப்படின்னு முடிவு பண்ணி கடவுள் துகள் " GOD PARTICLE " அப்படின்னு பேரு வச்சாங்க புத்தகத்த வெளியிட்ட பதிப்பககாரங்க ...இந்த பேரோட வெளி வந்த புத்தகத்துக்கு நல்ல வரவேற்பு ...

தொடர்ந்து எல்லா பத்திரிக்கையும் இந்த புத்தகத்துல சொல்லியிருக்கும் விசயங்கள மாங்கு மாங்குன்னு எழுதுனதுல .. புத்தகத்தோட பேரு ஏக பிரபலம் ஆகிபோச்சி ... இந்த சூழல்ல
சேர்ன்   "  CERN  " ஹிக்ஸ் போசோன கிட்ட தட்ட கண்டு பிடிச்சிட்டாத சொல்லவும் .... மொத்த மீடியாவும் .... ஹேய்ய் கடவுள் துக்ள கண்டுபிடிச்சாச்சி ....அப்படின்னு ஏகப்பட்ட கலவரத்த பண்ணிட்டாய்ங்க ... இதுதாங்க கடவுள் துகள் அப்படின்னு பேருவந்த வரலாறு ...


CERN 

12 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து அணு துகள் ஆராய்ச்சிக்காக இந்த சேர்ன் CERNகிற அமைப்பை 1954 செப்டெம்பெர் 29ல உண்டு பண்ணாங்க ...
(கிழே இருக்கும் படம் அந்த 12 நாடுகள் யார் யாருன்னு குறிக்குது - நன்றி விக்கி ) 1952ல அந்த 12 ஐரோப்பிய நாடுகளும் CERNஐ உருவாக்க நிபுணர்களை கொண்ட ஒரு கவுன்சில் அமைச்சாங்க.... 

அந்த கவுன்சிளோட பேரு Conseil Européen pour la Recherche Nucléaire (அணு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய கமிசன்)  இதனுடைய சுருக்கம் தான்   CERN .. 

அணு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய கமிசன் 1954ல அணு 
ஆய்வுகளுக்கான ஐரோப்பிய கூட்டு நிறுவனம் உருவான பின்னாடி கலைக்க பட்டுடிச்சி இருந்தாலும் CERNங்கிற சுருக்க பெயரையே 
தொடருவதா முடிவு பண்ணாங்க... 


CERNனின் 12 ஆரம்ப உறுப்பு நாடுகள்


இந்த ஆராய்ச்சி நிலையம் ஜெனிவா நகரத்துக்கு வெளியே வடமேற்கில் பிரான்ஸ் மற்றும் ச்விச்சர்லாண்ட் நாட்டின் எல்லையில் இருக்கு... இங்கதான்  பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில்
27 கிலோமீட்டர் வட்டமா சுரங்கம் தோண்டி அதுல ( LHC )
லார்ஜ் ஹார்டான் கோளைடர் அப்படிங்கிற துகள் விரட்டி   ஆராய்ச்சி நிலையத்த கட்டியிருக்காங்க .. 

இந்த LHC துகள் விரட்டிய தவிர இன்னும் சின்ன சின்ன துகள் விரட்டி ஆராய்ச்சி நிலையங்களும் ஒரு துகள்களின் வேகத்தை குறைக்கும் ஆராய்ச்சி நிலையமும் இந்த CERNல இருக்கு ...


CERN இருக்கும் இடம் 

CERNல 2400 முழு நேர பணியாளர்களும் , 1500 பகுதி நேர பணியாளர்களும் வேலை செய்யிறாங்க அத்தோட 113 நாடுகள்ல  
இருக்கும் 608 பல்கலைகழகங்கள் அப்புறம் ஆராய்ச்சி நிறுவனங்கள்ல இருந்து வருசத்துக்கு 10,000 சொச்சம் விஞ்ஞானிகளும் , பொறியியல் வல்லுனர்களும்  இங்க வந்து போறாங்க ..

CERNல ஹிக்ஸ் போசோன் ஆராய்ச்சி  ஆரம்பிக்க பட்டதுல இருந்து இப்ப வரைக்கும் 13.25 பில்லியன் டாலர் செலவு ஆகியிருக்குனு போர்ப்ஸ் பத்திரிக்கை சொல்லுது ...இந்த LHCக்கு மட்டும் 4.75 பில்லியன் செலவானதா போர்ப்ஸ் சொல்லுது ...
 LHC

வருசத்துக்கு நடைமுறை செலவு மட்டும் 1 பில்லியன் டாலர் ஆகுது ..23மில்லியன் டாலர் அளவுக்கு வருசத்துக்கு மின்சாரம் செலவாகுது ...LHC கட்டி முடிக்கவே 10 வருசம் ஆகி இருக்கு இதுல 2008 ல இருந்து 2009 வர எந்திர கோளாறு காரணமா ஆராய்ச்சிய நிப்பாட்டி வச்சியிருந்தாங்க ...

-456.25 டிகிரி பெரேன் குளிர் வெப்ப நிலைல 9300 காந்தங்களை வச்சி துகள்கள வேகமா ஓட வச்சியிருக்காங்க... கிட்ட தட்ட ஒளி வேகத்துல 99.99 % சதவித வேகத்துக்கு துகள்கள ஓட வச்சியிருக்காங்க ..
தலதெறிக்க விரட்ட படும் போட்டான் துகள்கள் அடுத்தடுத்து வெவ்வேறு துகள் விரட்டி குழாய்கள் வழியா  பயணப்பட்டு கடேசிய ஆறாவது துகள் விரட்டி குழாயான LHCக்கு வந்து சேருது ...இங்க வரும்போது ஒளி வேகத்துல 99.99 சதவித வேகத்த அடஞ்சிடுது  ...




CERNல இப்படி போட்டான் துகள்கள LHCல  ஒன்னோட ஒன்னு மோத விட்டு ..அந்த மோதல் காரணமா வெடிச்சி சிதறும் துகள்கள ஆராய்ச்சி பண்ணி முடிவுகளுக்கு வர்றாங்க ..இப்படி LHCல நிகழும் வெடிப்ப உத்து பாத்து , போட்டோ புடிச்சி , ஸ்கேன் பண்ணி , எக்ஸ்ரே எடுத்து ஆராய CMS , ATLAS , LHCB, MOEDAL, TOTEM, LHC, ALICE  அப்படின்னு  ஆறு வகையான ஆராய்ச்சி குழுக்கள்  CERNல இயங்குது ..


LHCல நிகழும் வெடிப்பு , எப்படி துகள்கள் விரட்ட  படுது , வெடிப்பு  எப்படி நிகழ்த்த படுது இதெல்லாம் அடுத்த பதிவுல படங்களோட விபரமா ...







Thursday, October 31, 2013

கடவுள் துகள் - பதிவு 2


போன பதிவுல பெர்மியான்ஸ் துகள்கள் , போசோன் துகள்கள் மூலமாதான் ஒன்றை ஒன்று வினை புரியுது அப்படின்னு சொல்லியிருந்தேன்...அது எப்படினா ...

ஒரு விசயத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிச்சாங்க .... 
போசோன்கள் தான்  பெர்மியான்ஸ்களுக்கு  நிறையை தருது ..(நிறை அப்படினா எடை அப்படின்னு எடுத்துக்க கூடாது ....ஒருவகையில் சொல்லுறதா இருந்தா அடர்த்தியுடன் கூடிய எடை அப்படின்னு சொல்லலாம் .... திணிவு  அப்படின்னும்  சொல்லலாம்னு சொல்லுறாங்க ) ..

வெவ்வேறு துகள்கள் வெவ்வேறு திணிவுல இருக்குது.. உதாரணதுக்கு ப்ரோட்டான் துகள் எலக்ட்ரான் துகள்களை விட 1,837 மடங்கு அதிகமா திணிவு கொண்டது ...இது எப்படி வந்திருக்க முடியும் அப்படின்னு ஆராய்ச்சி பண்ணி இப்படி திணிவு வித்தியாசம் வரதுக்கு போசோன் தான் காரணமா இருக்க முடியும் அப்படின்னு முடிவுக்கு வந்தாங்க ..

போசோன்கள் எப்படி பெர்மியான்ஸ்களுக்கு திணிவு  தருதுங்கிரத புரிஞ்சிக்க எவ்வாலோ வேணா தண்ணிய உறிஞ்சிக்கும் ஒருவகை பஞ்ச கற்பனை பண்ணிக்கோங்க ...இப்ப அந்த பஞ்ச கடல்ல போடுறிங்க , நீங்க கடல்ல போட்ட பஞ்சு எவ்வளோ வேணா தண்ணி உறிஞ்சிகும் இல்லையா ...இப்போ அந்த பஞ்ச கடல்ல போட்ட அரைமணி நேரத்துல எடுத்தா ஒரு எடையும் ..ஒரு மணிநேரம் கழிச்சு எடுத்தா வேற எடையும் இருக்கும்ல அது மாதிரிதான் ...

பெர்மியான்ஸ் அப்படிங்கிற துகள்கள் போசோன்கள் அப்படிங்கிற கடல்ல எவ்வளவு தொடர்புல இருக்கோ அவ்வளவு திணிவு உள்ளதா  மாறிடும் ....அதாவது பெர்மியான்ஸ் துகள்கள்  போசோன் துகள்களுடன் எந்த அளவுக்கு தொடர்புல இருக்கோ அந்த அளவுக்கு அதுக்கு திணிவு  உண்டாகுது 

ஆனா விஞ்ஞானிகளுக்கு ஒன்னு மட்டும் புரியவே இல்ல ..அதாவது இத்தனை துகள்களும் எப்படி ஒண்ணா இணைஞ்சி வேல செய்யுது அதுவரை கண்டுபிடிச்சி இருந்த போசோன் துகள்களில் எது இப்படி எல்லா துகள்களையும் பினச்சி வச்சியிருக்கு அப்படின்னு புரியல... இப்படி எல்லோரும் குழம்பி போய் இருந்தப்ப 1964 ல பீட்டர் ஹிக்ஸ் அப்படிங்கிற இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் ஒரு விசயத்த கண்டு பிடிச்சி சொன்னார் ..


பீட்டர் ஹிக்ஸ் தன்னோட  ஆராய்ச்சி மூலமா ஒரு புது வகை போசோன் இருக்கணும் அதுதான் இப்படி துகள்களை பினச்சி வச்சிஇருக்கு அப்படின்னு முடிவுக்கு வந்தார் ...தன்னோட ஆராய்ச்சிய முடிவுகள ரெண்டு கட்டுரையா எழுதினாரு ..ஒவ்வொரு கட்டுரையும் ரெண்டே பக்கம் அவ்வளவுதான் ..அந்த கட்டுரைகள அன்னைக்கு அறிவியல் உலகத்துல பிரபலமா இருந்த த பிஸிக்ஸ் அப்படிங்கிற பத்திரிக்கைக்கு அனுப்பி வச்சார் ..

முதல் கட்டுரைய ஏத்துகிட்ட அந்த பத்திரிக்கை ரெண்டாவது கட்டுரைய செல்லாது செல்லாது அப்படின்னு திருப்பி அனுப்பிட்டாங்க ...அதுக்கு பின்னாடி அந்த கட்டுரைக்கு மேலும் விளக்கம் தர சொல்லி யோய்ச்சிரோ அப்படிங்கிற விஞ்ஞானி சொல்லவும் ...ஹிக்ஸ் கடல் அலைகள் தரையை வந்து அடிகிற மாதிரி ..குவாண்டம் உலகில் துகள்கள் மோதிக்கும் போது தான் சொல்லும் அந்த புது வகை போசோன கண்டுபிக்கலாம் அப்படின்னு விளக்கினார் அந்த கட்டுரைய  த பிஸிக்ஸ் பத்திரிகைக்கு போட்டி பத்திரிக்கை பிரசுரம் பண்ணாங்க  ..

ஹிக்ஸ் ஆராய்ச்சி முடிவு படி அவர் சொன்ன புது வகை போசோன் மத்த எல்லா துகள்களையும் பினச்சி வச்சியிருக்கும் ....அத புருஞ்சிக்க ஒரு உதாரணம் ...அநேகமா நாம் எல்லாரும் பழங்கள் போட்ட  கேக் ( fruit cake ) சாப்பிட்டு இருப்போம் ..அதுல இருக்குற பழங்களை விட அதில் இருக்கும் மாவு அதிக எடை இருக்கும் அத்தோட அந்த மாவு தான் பழங்களை பினச்சி வச்சியிருக்கு ...அது போல தான் இந்த போசோன் மத்த துகள்கள பினச்சி இருக்கு  ...


இப்படி ஹிக்ஸ் சொன்ன போசோனுக்கு மைய்ய சுழற்சி இருக்காது மேலும் பிரதிபலிப்பு துகளுக்கு நேர் மின் தன்மை இருக்கும் அப்படின்னு முடிவு பண்ணி 40 வருசமா தேடுனாங்க ...( பிரதிபலிப்பு துகள்னா ரெட்டை துகள்னு அர்த்தம் இல்ல ..குவாண்டம் துகள்கள் பெரும்பாலும் துகளாகவும் ..அலையாகவும் நிலை மாறிகிட்டே இருக்கும் .....இப்படி ஒரு நிலையில்  இருக்கும் போது என்ன மின் தன்மை இருக்கோ அதுக்கு எதிரான மின் தன்மை வேறு நிலைக்கு மாறும் போது இருக்ககும்  )

இவர் சொன்ன அந்த போசோன் வகைகள கடந்த 40 வருசத்துக்கு மேலா தேடோ தேடுன்னு தேடிகிட்டு இருந்துச்சி விஞ்ஞானிகளின் உலகம் ...இப்படி தொடர்ந்து தேடுனதுல தான் ஜூலை 4 , 2012 "  CERN  "  அப்படிங்கிற அணு ஆய்வுகளுக்கான ஐரோப்பிய கூட்டு நிறுவனம் (The European Organization for Nuclear Research,(CERN) - )  வருசகணக்கா நேக்கு காட்டிகிட்டு இருந்த  பீட்டர் ஹிக்ஸ் சொன்னா போசோன் துகள கண்டு பிடிச்சுட்டதா அறிவிச்சாங்க ....அப்படி அவங்க கண்டுபிடிச்ச  துகளுக்கு அவங்க ஹிக்ஸ் போசோன் அப்படினுதான் பேரு வச்சாங்க ..

அப்புறம் எப்படி கடுவுள் துகள்னு பேருவந்துச்சி அதுவும் ( CERN ) செர்ன் பத்தியும்  அடுத்த பதிவுல தொடருவோம் ...

சராசரி ( law of averages )  மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அப்படிங்கிற இரண்டு கணித விதிகளை பத்தி போன பதிவுல சொல்லியிருந்தேன் அந்த இரண்டையும் விளக்கும்படி வீரா கேட்டிருந்தார் ..அதனால அத பத்தி கொஞ்சம்  ...

சராசரி கணித விதி ( law of averages ) :

ப்ரோபபிளிட்டி probability பத்தி பள்ளிகூடத்துல படிச்சியிருப்போம் ஒரு காச சுண்டி போட்டா எத்தன முறை தலை விழும் எத்தனை முறை பூ விழும் அப்படின்னு வாத்தியார் சொல்லி கொடுத்தது புரியாம நாமளும் காச சுண்டி போட்டு பார்திருப்போம் ....

இப்படி 1000 முறை இல்லனா 1,00,000 முறை சுண்டி போட்டா ஒரு கட்டத்துல சரி அளவு தலயும் சரி அளவு பூவும் விழும் அப்படிங்கிறதுதான் இந்த சராசரி கணித விதி ....இன்னும் துல்லியமா சொல்லனும்னா அப்படி சரி அளவு தலயும் பூவும் விழும் வரை விடாம காச சுண்டிகிட்டே இருக்குறது

இப்படி லட்சம் தடவ காச சுண்டினா சரி அளவு பூவும் , தலயும் விழுமானா  .. தெரியாது ... ஆனா இங்க வேறொரு விசயம்  நடந்துடுச்சி... ஒருமுறை கூட காச சுன்டாமல் இருக்கம் நிலையை விட 11வது முறை நாம் காச சுண்டும்போது இன்னும் எத்தனை முறை சுண்டினா தலயும் பூவும் சரி அளவு விழும் அப்படின்னு கணக்கு போட முடியுது ..இத அடிப்படையா வச்சிதான் பெரிய பெரிய ஆராய்ச்சிலாம் நடந்துகிட்டு இருக்கு ...சரி அடுத்து 

பகிர்மான கணித விதிக்கு ( law of distributions ) வருவோம் :

வேதியியல் அப்புறம் குவாண்டம் இயற்பியலில் இந்த விதி என்ன சொல்லுதுனா ஒரு வருசையில் உள்ள மூல கூறுகளின் மொத்த ஆற்றல் சரி சமமாக எல்லா மூல கூறுகளிலும் பிரிக்க படுவதில்லை .. மாறாக ஒரு சாரசரியின் அளவை ஒட்டி பிரிக்க படுதுனு சொல்லுது ...

புரியலையா ..சரி ஒரு உதாரணம் ....5 பேரு கொண்ட குழுவுக்கு சமைக்கணும் அப்படினா என்ன செய்யுறோம் வயசு , ஆண் , பெண் , உடல் உழைப்பு  இப்படி பல விசயத்த அடிப்படையா வச்சி எவ்வளவு அரிசி வேக வைகிரதுனு முடிவு பண்ணுறோம்ல ..இங்க நாம சம அளவு இல்லாம ஒரு சராசரி அளவ எடுத்துகிட்டு இருக்கோம் இல்லையா இதுதான் ( law of distributions ) பகிர்மான கணித விதி ...





Tuesday, October 29, 2013

கடவுள் துகள் - பதிவு 1


ஹிக்ஸ் போசோன் எனும் கடவுள் துகள்

கொஞ்சநாளுக்கு முன்னாடி கடவுள் துகள் அப்படின்னு எதோ கண்டுபிடிச்சிருக்காங்க அப்படின்னு ஏக பரபரப்பா செய்திகள் வந்துகிட்டு இருந்துச்சே நாபகம் இருக்கா ....அது என்ன கடவுள் துகள் ...கடவுளையே  துகள் வடிவத்துல கண்டுபிடிச்சிட்டாங்களா  ...இல்ல கடுவுள் வச்சியிருந்த துகளை கண்டுபிடிச்சிட்டாங்களா ..என்ன இது ...ஹிக்ஸ் போசோன் பெயர் எப்படி வந்துச்சி .....

இந்த சேதிதான் என்ன ...

1924 பெங்கால் மாகாணம் ..கொல்கத்தா நகரம் ....சோனு கொட்டிகிட்டு இருந்த  பருவ மழையில் ரோடு முழுக்க ஓடிகொண்டிருந்த மழை தண்ணி  சத சதக்க ஓட்டி  வந்த சய்கில வீட்டு முன் வாசல் செவத்தோட நிக்கவச்சிட்டு பர பரக்க உள்ள வந்தார் 30 வயசான சத்தியேந்திர நாத் போஸ் ..

இளம் கணித மேதை ...இங்க பரு இங்க பரு அப்படின்னு தன்னோட மனைவிகிட்ட அந்த ஜேர்மன் சஞ்சிகையை காட்டி  ஏக மகிழ்ச்சில அதுல வந்திருந்த ஒரு கட்டுரைய காட்டினர் ....அவர் மனைவிக்கு அதுல என்ன எழுதியிருக்குன்னு சுத்தமா புரியல ஆனா நிச்சயம் தன்னோட கணவரோட ஆராய்ச்சி பத்தி எதோ வந்திருக்குன்னு மட்டும் புரிஞ்சி மகிழ்ச்சி அடைஞ்சாங்க ....

அப்படி என்ன அதுல வந்திருந்துச்சி ...

போன நூற்றாண்டு தொடக்கத்துல தான் குவாண்டம் இயற்பியல் பத்தி உலகம் முழுக்க ஆராய்ச்சிகள் நடக்க ஆரம்பிச்சி இருந்தது ..1920கல இந்த ஆராய்ச்சிகளின் வழியா கொஞ்சம் கொஞ்சமா அணுவுக்குள் இருக்கும் அதிசய உலகம் வெளிய தெரிய ஆரம்பிச்சது ...( அதாவது ஒரு அணுவின் அடிப்படை துகள்களாகிய , எலக்ட்ரான் , ப்ரோட்டான் , நியுட்ரான் இவைகள இன்னும் பொடுசு பொடுசா உடச்சி உள்ள பார்க்குற ஆராய்ச்சிக்கு தான் குவாண்டம் இயற்பியல் அப்படின்னு சொல்லுறாங்க )..


இப்படி நடந்துகிட்டு வந்த ஆராய்சிகளில் போட்டான் போன்ற குவாண்டம் துகள்கள் எப்படி வேலை செய்யுது அப்படிங்கிறது ரொம்பவே உலக ஆராய்ச்சியாளர்களை மண்டைய பிச்சிக்க செஞ்சுது ....( அண்டம் பத்தி நான் சொல்லிட்டு வந்தப்ப அதுல வெளிச்சம் அப்படிங்கிறது போட்டான் அப்படிங்கிற துகள்களால்/ சக்தி பொட்டலங்கலால் ஆனது  அப்படின்னு சொன்னது நினைவிருக்கும் ) இந்த போட்டான் மாதிரியான துகள்களை எப்படி வரையறை பண்ணுறது அப்படிங்கிறது தான்  சத்தியேந்திர நாத் போஸ் ..
செஞ்ச ஆராய்ச்சி ...

அதாவது சரியா சொல்லனும்னா ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இந்த அடிப்படை துகள்களை எப்படி சம அளவு உள்ள பல பிரிவாக பிரிப்பது அப்படிங்கிறதுதான் இவரோட ஆராய்ச்சி ...

உதாரணதிற்கு உங்க கிட்ட A , B அப்படின்னு ரெண்டு போட்டன் இருக்கு உங்க முன்னாடி மேசையில ஒரு கருப்பு தட்டும் ஒரு சிவப்பு தட்டும் இருக்கு இப்ப உங்க கிட்ட இருக்குற  ரெண்டு போட்டானையும் எத்தன மாதிரி அந்த ரெண்டு தட்டுலையும் வைக்கலாம் அப்படின்னு யோசிச்சப்ப... ..ஒன்னு A , B ரெண்டையும் கருப்பு தட்டுல வச்சிட்டு சிவப்பு தட்ட வெறுமனே விட்டுடலாம் , இல்லாட்டி A , B ரெண்டையும் சிவப்பு  தட்டுல வச்சிட்டு கருப்பு  தட்ட வெறுமனே விட்டுடலாம் , அப்படியும் இல்லாட்டி  A வ கருப்பு தட்டுலயும்  B ய சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் .. அப்புறம் B ய கருப்பு தட்டுலயும்  A வ சிவப்பு தட்டுலயும் வைக்கலாம் ..இத்தனை வாய்ப்பு இருப்பதா மேலோட்டமா பார்த்தா தெரியுது ...

ஆனா இங்க தான் இயற்கை ஒரு முரன காட்டுது அதாவது ஒரு போட்டானுக்கும் இன்னொரு போட்டானுக்கும் நம்மால வித்தியாச படுத்தி பாக்க முடியாது என்பதால கடேசிய சொன்ன ரெண்டு வழியும் ஒன்னு தான் அப்படின்னு வச்சிக்கணும் ....இந்த புரிதல விரிவா ஆராய்ச்சி பண்ணி தன்னோட ஆராய்ச்சியை யாராவது மிக சிறந்த விஞ்ஞானி கிட்ட காட்டி கருத்து கேக்கணும் அப்படின்னு முடிவு பண்ணப்ப ...கேக்குறதுதான் கேக்குறோம் நேரடியா ஐன்ஸ்டின் கிட்டவே கேப்போம் அப்படின்னு முடிவு பண்ணிட்டார் சத்தியேந்திர நாத் போஸ்  ....தனது ஆராய்ச்சியை அப்படியே ஐன்ஸ்டினுக்கு அனுப்பி வச்சார் .....


தினமும் குறைஞ்சது 5 கொயர் பேப்பராவது உலகத்தயே கிடிகிடுக்க வய்க்க போகும் கண்டுபிடிப்பு அப்படின்னு சொல்லி கட்டு கட்டா ஐன்ஸ்டினுக்கு வரும் ...அப்படி எனனா தான் இருக்குனு பார்த்தா கடேசில புஸ்ஸுன்னு போயிடும் ....

அப்படி ஒரு நாள் .......
" மதிப்பிற்கு உரிய அய்யா , இத்துடன் எனது கட்டுரையை உங்கள் மேலான கருத்துக்களுக்கும் , ஆவன செய்யும் பொருட்டும் துணிந்து அனுப்பி உள்ளேன் ... இது குறித்து உங்கள் கருத்துகளை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் .......மேலும் எனக்கு அவ்வளவாக ஜெர்மன் மொழி தெரியாது எனவே இதனை மொழிபெயர்க்க இயலவில்லை .......இந்த கட்டுரைக்கு  பிரசுரிக்கப்படும் தகுதி இருப்பின் இதனை ஜெர்மன் மொழியில் பிரசுரிக்க ஆவன செய்யும்படி வேண்டி கொள்கிறேன் .....
என்னை யாரென்றே உங்களுக்கு தெரியாத போதும் இந்த உதவியை உங்களிடம் கேட்பதில் எனக்கு தயக்கம் இல்லை ...ஏன் என்றால் நாங்கள் எல்லோரும் உங்கள் மாணவர்கள் உங்களிடம் பாடம் பயின்றவர்கள் உங்கள் எழுத்துக்கள் மூலம் கற்று கொண்டதனால் பயன் அடைந்தவர்கள் ...
சில காலங்களுக்கு முன் உங்களுடைய சார்பியல் கட்டுரைகளை மொழி பெயர்த்து வெளியிட கல்கட்டாவிலிருந்து உங்களிடம் அனுமதிகேட்கப்பட்டது  நீங்களும் அதற்கு சம்மதித்து இருந்தீர்கள் .உங்களுக்கு இன்றும் நினைவிருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை .... உங்களுடைய சார்பியல் கட்டுரைகள் மொழி பெயர்க்க பட்டு புத்தகமாக இங்கு வெளிவந்துள்ளது  ..அதனை மொழி பெயர்த்தவன் நான் தான் ..."
இப்படி ஒரு கடிதத்துடன் சத்தியேந்திர நாத் போஸின் ஆராய்ச்சி கட்டுரை  ஐன்ஸ்டினை வந்தடைந்தது ....

கடிதத்தை படிச்ச பின்னாடி  சத்தியேந்திர நாத் போஸ் யார்னு விசாரித்து தெரிஞ்ச்சிகிட்ட  ஐன்ஸ்டின் ...கட்டுரையை படிக்கவும் ..இது ஒன்னும்தெரியாத ஒருத்தர் எழுதினது இல்லை அப்படின்னு புரிஞ்சிகிட்டார் .... அந்த கட்டுரையில் சொல்லியிருந்த ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்தி தனது கருத்துகளுடன் போஸ்ஸின் பெயரிலேயே ஜெர்மன் மொழியில் கட்டுரை வெளிவர செஞ்சார்  .... இப்பவும் போஸ் வெளிக்கொண்டு வந்த இந்த முறை போஸ்-ஐன்ஸ்டின் புள்ளியியல் விதி அப்படினே  அழைக்கபடுது ....

இந்த விதி ஒன்ன ஒன்னு வித்தியாச படுத்தி பாக்கமுடியாத குவாண்டம் துகள்களை தனிதனியா ஆராய்ச்சி பண்ணி விடைகளை கண்டுபிடிகிறத விட சராசரி ( law of averages )  மற்றும் பகிர்மானம் ( law of distributions ) அடிப்படையில் ஆராய்ச்சி பண்ணுறத வரையறை செய்யுது  ...இந்த விதியின் வரையறைக்குள் வரும் துகள்களை போசோன் துகள்கள் அப்படின்னு போஸின் பெயரை வச்சாங்க  ...

குவாண்டம் உலகத்துல இது வரை கண்டு பிடிச்ச துகள்கள் எல்லாம் ரெண்டு வகைல அடங்கிடுது ஒன்னு போசோன் இன்னொன்னு பெர்மியான்ஸ் ...

இந்த பெர்மியான்ஸ் அப்படிங்கிற பேரு அந்த வகைகளை கண்டுபிடிச்ச இத்தாலி நாட்டு ஆராய்ச்சியாளர் என்ரிகோ பெர்மி அப்படிங்கிரவரோட பேரையே வச்சுட்டாங்க ...

தொடர்ந்த ஆராய்சிகளில் இயற்கையின் சில விதிகள் நமக்கு புரியவந்துச்சி ..அதாவது பெர்மியான்ஸ் துகள்கள் , போசோன் துகள்கள் மூலமாதான் ஒன்றை ஒன்று வினை புரியுதுங்கிற விசயம் புரிஞ்சது ...எப்படினா

எப்படிங்கிரதையும் ..... ஹிக்ஸ்ங்கிற பேர் எப்படிவந்துச்சி ....எத்தன வருசமா இந்த ஆராய்ச்சி நடக்குது ....யார் பண்ணுறா ...இன்னும் நம்ம ஆச்சரிய பட வைக்கும் நெறைய சேதி அடுத்த பதிவுல ...

தொடர்து படிங்க ..கையோட உங்க கருத்துகள கமெண்ட் போடுங்க ...உங்க கமெண்ட்  இன்னும் சிறப்பா பதிவுகள் வர  உதவி செய்யும் ....







Wednesday, October 23, 2013

பணம் - பதிவு 2



பணம்  - பதிவு 1ல் ...
  • அந்த பணம் எங்கிருந்து வருது ...?
  • பணத்துக்கு எது அடிப்படை ....?
  • அதுக்கு எப்படி மதிப்பு வருது .....? 
அப்படின்னு மூணு கேள்வியோட முடிச்சி இருந்தேன் ....அந்த மூணு கேள்விக்கும் ஒரே விடை தான் ....fractional reserve banking மற்றும் capital ( Basel ) reserve banking அப்படினா என்னான்னு தெரிஞ்சா விடை தெரிஞ்சிடும் ....

fractional reserve banking - அப்படினா பகுதி இருப்பு வங்கி நடை முறை ..
capital ( Basel ) reserve banking - அப்படினா முதல் இருப்பு வங்கி நடை முறை ..

இது ரெண்டும் ஒரே குட்டையில ஊரின மட்டை தான் ...மேம்போக்கா வித்தியாசம் இருக்குற மாதிரி தெரிஞ்சாலும் ..உண்மையில வித்தியாசம் கெடையாது ...

fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடை முறை அப்படினா என்னான்னு முதல பாப்போம் ..இது புரிஞ்சிடுச்சினா capital ( Basel) 
reserve banking - முதல் இருப்பு வங்கி நடை முறை புரிஞ்சிடும் ...

வங்கியோட முக்கிய பணி கடன் கொடுக்குறது ..இப்படி கடன் கொடுத்து வாங்க முதல் முதலா ஒரு வங்கி செயல் பட ஆரம்பிக்கும் போது பங்கு வெளியிட்டு திரட்டிய கொஞ்சம் மூலதனத்தோட ஆரம்பிப்பாங்க ... அப்புறம் தனிநபர் , நிறுவனங்கள் இவங்க கிட்ட இருந்து வைப்பு அதாவது டெபொசிட் வாங்கி ..அதைய கடனா கொடுக்க ஆரம்பிப்பாங்க ..இங்க தான் வில்லங்கம்  தொடங்குது ...

இப்படி வைப்பு அதாவது டெபொசிட் வாங்கி கடன் கொடுக்க ஒவ்வொரு நாட்டின் மத்திய வங்கியும் central bank ( நம்ப நாட்டுல - ரிசேர்வ் பேங்க் ஒப் இந்தியா RBI- RESERVE BANK OF INDIA  ) சில வரை முறைகள சொல்லுது ...அப்படி சொல்லுற வரையறை படிதான் நாட்டின் மத்த வங்கிங்க வேல செய்யும் ....

இப்படி மத்திய வங்கியால ( RBI- RESERVE BANK OF INDIA )சொல்லப்படும் முக்கியமான ஒரு வரையறை தான் இந்த fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடைமுறை ...அப்படி என்னா தான் சொல்லுறாங்க ....

அதாவது ஒரு வங்கி தன் கிட்ட ரிசர்வ்லா ( இருப்பு ) இருக்கும் பணத்த போல எத்தன மடங்கு கடன் கொடுக்கலாம் அப்படின்னு விதி முறை வகுக்குறாங்க ..

பொதுவா உலகம் முழுதும் 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரையறை செய்யறாங்க ..இத தலைகீழா 1 சதவீத ரிசர்வ் ... 10 சதவீத அப்படின்னு சொல்லுவாங்க ..அதாவது ஒரு வங்கி கிட்ட 100 ரூபா இருக்குனா ..10 சதவீத ரிசர்வ் ( இருப்பு ) வரையறை படி ஆயிரம் ரூபா வரை அந்த வங்கி கடன் கொடுக்கலாம் ... 1 சதவீத ரிசர்வ் வரையறை படி 10,000 ரூபா கடன் கொடுக்கலாம் .....எப்படி இருக்கு இந்த திட்டம் ....

சுருக்கமா சொன்னா ..ஒவ்வொரு முறையும் கையிருப்பை போல்  எத்தன மடங்கு கடன் தரலாம் அப்படிங்கிறதுதான் இந்த fractional reserve banking - பகுதி இருப்பு வங்கி நடை முறை ...

( 300 வருசாம மெல்ல நகத்தி இன்னைக்கு உலகம் முழுதும் இந்த அடிபடையில தான் வங்கிகள் நடக்குது )

கீழ இருக்குற படத்த பாருங்க


இதுல அப்படி என்னத்த குத்தம் கண்டுபிடிச்சிட்டிங்க அப்படின்னு கேட்டா ...காத்துல கட்டுன கோட்டைதான் இந்த வங்கி முறை ....அத விட முக்கியம் இது உண்டாக்கும் பணம் ஒரு உலக மகா பொய் ...அது எப்படின்னு அடுத்த படத்த பாருங்க ....




மேலே உள்ள படத்துல முதல் பத்தியில் வங்கி / தனிநபர் அல்லது நிறுவனம் என்ற தலைப்பின் அடியில் A , B , C என்று உள்ளது ... இந்த A , B , C லாம் தனி நம்பர்களின் பெயர் அப்படின்னு கற்பனை பண்ணிக்கோங்க ..இப்ப A கிறவர்  1,00,000 ரூபாயை ஒரு வங்கியில் டெபொசிட் பண்ணுறார் ..அந்த டெபொசிட்ல 10 % ரூபாய் 10,000 வங்கி இருப்பா வச்சி கிட்டு மீதி 90,000 ரூபாயை கடனா கொடுக்குது ..( கடனா கொடுத்த ரூபாய்  செலவு செயப்படும் போது அது முடிவாக யாரோட பெயரிலாவது வங்கிக்கு வந்து தான் ஆகும் )

கடன் வாங்கினவர்கிட்ட   B கிற  வியாபாரி தன்னோட பொருள வித்து அந்த 90,000 ரூபாயை சம்பாதிக்கிறார்  திரும்ப வேறொரு வங்கியில்  B அந்த பணத்த டெபொசிட்  பண்ணுறார் ..இப்போ வங்கி திரும்பவும் அந்த டெபொசிட்ல 10 % ரூபாய் 9,000 வங்கி இருப்பா வச்சிக்கிட்டு மீதி 81,000 ரூபாயை கடனா  கொடுக்குது ..இப்படியே போய்கிட்டு இருக்கு ..

முடிவுல ...படத்த பாருங்க வங்கியில கடேசியாக பண்ணப்பட்ட டெபொசிட் + வங்கியில ( ரிசர்வ்ல ) இருப்புல இருக்குற மொத்த பணம் ரெண்டையும் கூட்டினா ..வங்கியில ஆரம்பத்தில் செய்யப்பட டெபொசிட் தொகை வருது ( மஞ்சள் நிறத்துல வேறுபடுத்தி காட்டியிருக்கேன் )...

வங்கிகள்  வெறும் 1,00,000 ரூபாயை டெபொசிட்டா வாங்கி கடனா கொடுத்த ரூபாய் 5,86,189 ரூபாய் உண்மையில கையிலிருந்த பணம் இல்லை ...அது வெறும் பொய் ....

இதே நிகழ்வ A , B , C கிறது நிறுவனங்கள் அப்படின்னு வச்சிக்கிட்டு பாருங்க ...

இதே நிகழ்வ A , B , C கிறது வெவ்வேறு வங்கிகள்னு வச்சிக்கிட்டு பாருங்க ...

இப்படி காத்துல உருவாக்கின பணத்த நம்பி நாம் சேமிக்கிறோம் , செலவு செய்யிறோம் , சம்பளம் வாங்குறோம் , முதலிடு பண்ணுறோம் ....இதுக்கு மேல வரி கட்டுறோம் ....இதுல ( inflation )  பண வீக்கம் அப்படிங்கிற மறைமுக வரி வேற.. இததான் பொருளாதார நிபுணர்கள் பண புழக்கம் ( money supply ) அப்படின்னு சொல்லுறாங்க ..

ஏதும் சந்தேகம் வந்தா ..கமெண்ட் போடுங்க ..விபரமா சொல்லுறேன்

அடுத்த பதிவுல ..ஒரு முறை செய்யப்பட்ட் டெபொசிடின் மீது இந்த பண சுழற்சி எவ்வளவு வரை போகும் , எந் எந்த நாட்டுல எவ்வளவு reserve நடை முறையில இருக்கு ...இதெல்லாம் விபரமா ....





Tuesday, October 15, 2013

பணம் - பதிவு 1


காசு பணம் துட்டு வரிசையில் சொத்துகளை பற்றி சொல்லி முடிச்சப்ப
" தேவை , அளிப்பு , மதிப்புயர்தல் இவை எப்படி தனி மனித , நிறுவன , சர்வதேச பொருளாதாரம் எனப்படுகிறது ? " 
அப்படிங்கிற  கேள்வியோட  முடிச்சேன் ...

அந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா ...பணம் அப்படினா என்னான்னு சொல்ல ஆரம்பிக்கணும் .....

பணம் அப்படினா என்ன ? பேப்பர் நோட்டுக்கள் , சில்லரை காசு , பேங்குல இருக்குற பேலன்ஸ் , இப்படி ஏகப்பட்ட அநுமானம் நமக்கு வரும் ...ஆனா உண்மைய சொல்லனும்னா ..அதுவும் பலேருன்னு கன்னத்துல அரஞ்சாப்ள சொல்லனும்னா .... பணம் அப்படின்னு ஒன்னும் கிடையாதுங்கிறது தான் சரியான பதில் ...

என்னது பணம் அப்படின்னு ஒன்னும் இல்லையா ..என்ன லாரென்ஸ் உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா ..இல்ல சும்மானா எதாச்சும் சொல்லனும்னு  சொல்லுறிய அப்படின்னு கேக்க தோணும் ....

என்ன பண்ணுறது ..நீங்கன்னு இல்ல கிட்ட தட்ட 300 வருசமா நம்மள கொஞ்சம் கொஞ்சமா நம்ப வச்சி ..இந்த மாயையை ஏத்துக்க வச்சியிருகாங்க ...அது எப்படி நடந்துச்சி .... அதுக்கு முன்னாடி கொஞ்சம் பிளாஸ் பேக் ...

கிட்ட தட்ட இரண்டாயிரம் வருசத்துக்கு முன் வரை மக்கள் தங்களுக்கு  தேவைபடும் ஒரு பொருளுக்கு மாற்றா வேறொரு பொருள கொடுத்து வாங்கினாங்க .....இதுல ரொம்பவே சிக்கல் ...உதாரணமா உங்க கிட்ட ஒரு மூட்ட நெல்லு இருந்து உங்களுக்கு ஒரு மூட்ட சோளம் தேவைனா ...நெல்லுக்கு பதிலா சோளம் தர தயார இருக்குற ஒருத்தர தேட வேண்டி இருந்துச்சி .....இந்த பண்ட மாற்றுமுறை பல சிக்கல்களை உண்டுபண்ணவும் அதுக்கு ஒரு மாற்று ஏற்பாடு தேவ பட்டிச்சி ....

கால போக்குல கொஞ்சம் தட்டுபாடு இருக்குற பொருளுங்கள வாங்கிகிட்டு வேறு பொருள தர ஆரம்பிச்சாங்க ...யான தந்தம் , மயிலிறகு , தோல் , இப்படி ...அப்படியே கொஞ்சம் காலம் போனதும் ...உலகத்துல மக்கள் நகரங்களை உண்டு பண்ணி வாழ ஆரம்பிச்சதும் ...விவசாயம் , வேட்டை , மீன் பிடிகிறது , நெசவு  இப்படி அடிப்படை தொழில்கள் இல்லாம புதுசா கட்டுமானம் , சுரங்கம் , உருக்கு தொழில் , இப்படி புது தொழில்கள் உண்டாச்சி ....இந்த சமயத்துல தான் காசு புழக்கத்துக்கு வந்துச்சி ...

எந்த எந்த பகுதில என்ன உலோகம் கிடச்சிதோ அத வச்சி காசு செஞ்சாங்க ...தங்கம் , வெள்ளி , செம்பு , ஈயம் , இதெல்லாம் பரவலா காசு செய்ய பயன்பட்டுச்சி ....இதுலேயும் ஒரு சிக்கல் ...

எந்த உலோகத்துல காசு செய்ய பட்டிருக்குமோ அந்த உலோகத்தின் மதிப்புதான் அந்த காசுக்கு அப்படிங்கிறது பரவலா ஏற்றுக்கொள்ள பட்டு இருந்தாலும் ..தங்கம் , வெள்ளி , செம்பு இதுக்கெல்லாம் மத்த பயன்பாடும் இருந்ததும் , ஒரு சேமிப்பாக இந்த உலோகங்கள் இருந்ததும் , தொடர்ந்து அரசியல் மாற்றங்கள் , படையெடுப்புகள் , ஒரு ராஜா போய் இன்னொருத்தர் வரது ... பெரிய சாம்ராஜ்ஜியம் ஒடஞ்சி போறது ....அம்பது கிலோமீட்டருக்கு ஒரு தண்டால் காரன் தன்ன ராஜாவா சொல்லிகிட்டது ....நேத்து வரிக்கும் அவன் வேலிக்குள்ள இருந்த சுரங்கம் இன்னக்கு வேறொருவன் வேலிக்குள்ள வந்தது ...இதெல்லாம் அந்த உலோகங்களோட  மதிப்ப சீரா வச்சிக்க உதவல ...

இப்படியே நொண்டி அடிச்சிகிட்டு ...காசு , பண்ட மாற்று இது ரெண்டும் கலந்த கலவையா உலக , தனிமனித  பொருளாதாரம் கி.பி .13ஆம் நுற்றாண்டு வர காலம் தள்ளிகிட்டு வந்துச்சி ..இதுக்கு நடுவுல சீனா காரன் கொஞ்ச நாள் காகித பணம் அடிச்சி பயன் படுத்திகிட்டு வந்திருக்கான் ...என்ன ஆச்சுனா ...யார் யாருக்கெல்லாம் அச்சடிக்க தெரியுமோ அவனெல்லாம் பக்கம் பக்கமா அச்சடிக்க ஆரம்பிக்கவும் ஒரு கட்டத்துல இந்த வம்பே வேணாமுன்னு பேப்பர் பணத்த விட்டுட்டான்  ...

அப்பறம் சாவாகசமா ஐரோப்பிய நாடுகள் கி.பி .15 ல காசு , பண்டமாற்று அதுகூட பேப்பர் பணம் இதையும் சேர்த்து பொருளாதார  பொங்கல் வச்சுதுங்க ....இங்கையும் சிக்கல் வர ஆரம்பிக்கவும் ஐரோப்பா நாடுகள் முழுதும் ஏகப்பட்ட கொழப்பம் ...சிக்கல் என்னானா ...பெரிய அளவுல எந்திரங்கள வச்சி பொருட்கள உற்பத்தி பண்ண முடிஞ்சப்ப ...அப்படி உற்பத்தி பண்ணுற பொருளுக்கு தேவையான மூல பொருட்கள் ஒரு இடத்திலேயும் ..அத உற்பத்தி பண்ணும் தொழிநுட்பம் ஒரு இடத்திலயும் இருந்தது ....

அது மட்டும் இல்லாம ஏகப்பட்ட கண்டுபிடுப்புகள் ஏகப்பட்ட தொழில் வாய்ப்புகள் ....யாரு யாரா அடிச்சி சாப்பிடுறதுங்கறதுல நாடுகளுக்கு இடையே பெரிய அளவுல போட்டி உண்டாயிடுச்சி  ....அந்த போட்டி கூட்டு கொள்ளை , சதி பண்ணுறது , கால வாரிவிடுறது இன்னும் பல  அயோக்கிய தனக்கள உண்டு பண்ணிச்சி ...இப்படி ஏக கொழப்பத்துல ஐரோப்பிய நாடுகள் இருந்தப்ப ....  அங்க தான் வந்தான் நம்ப வில்லன் ...இதோட பிளாஸ் பேக் போதும் ....

யார் அந்த வில்லன் அது கொஞ்சம் சஸ்பென்ஸ்ல இருக்கட்டும் ...இப்ப நாம நிகழ் காலத்துக்கு வருவோம் ....

 பணம் இல்லனா நவீன பொருளாதாரம் இல்ல அப்படின்னு ஒத்துகிறிங்களா !!! ...

அதாங்க ..வெண்மை புரட்ச்சி , பசுமை புரட்ச்சி , மகா மெகா அணைக்கட்டுகள் ,  சுரங்கங்கள் , பெட்ரோல் கிணறுகள் , பெரிய பெரிய தொழில் சாலைகள் , விண்ணை முட்டும் கட்டடங்கள் , புல்லெட் டிரையின் , சொகுசு கப்பல்கள் , டபுள் டெக் விமானங்கள் , இன்டர்நெட் , செல் போன் , ஹைடெபெனெசன் டிவி  , 4டி சினிமா , இப்படி எல்லாத்துக்கும் அடிப்படை பணம் தான் இல்லையா ...
  • சரி அந்த பணம் எங்கிருந்து வருது ...?
  • பணத்துக்கு எது அடிப்படை ....?
  • அதுக்கு எப்படி மதிப்பு வருது .....?

இந்த கேள்விக்களுக்கு பதில் கேட்டா ..அனேகமா நம்ம காலேஜ் எகனாமிக் ப்ரொபசருங்க ..முட்டா பயலே இருக்குற சிலபஸ படிக்க முடியல ..இதுல கேக்க வந்துட்டான் கேள்வி ..பிச்சி புடுவேன் பிச்சி மரியாதையா போறியா இல்ல ப்ரின்சி கிட்ட கொண்டு போய் விடவானு மெரட்டி அனுப்பிடுவாங்க ..

சரி வேற யார் கிட்ட கேக்குறது ...யாரவது ஆடிட்டர் ..இல்லனா பேங்குல வேலபாக்குரவங்க ...கொஞ்சம் மெனக்கட்டு பெரிய பெரிய பண முதலைங்க இவங்க கிட்ட கேட்டா ... !!! சொல்லுவாங்களா ?? ....இல்லாட்டி வட்டம் , மாவட்டம் அப்படின்னு யாரையாவது புடிச்சி நம்ம மாநில இல்லனா நாட்டோட நிதியமைச்சர் இவங்கள யாருகிட்டவாவது கேட்டா சொல்லுவாங்கலா ...

யாருகிட்ட கேக்கலாம் ...யோசிச்சி சொல்லுங்க .... இல்லனா உங்களுக்கே விடை தெரிஞ்சாலும் சொல்லுங்க ...அடுத்த பதிவுல விட்ட இடத்துல இருந்து பணத்த எண்ணுவோம் சரியா  ....





Monday, October 14, 2013

பீதோவான்



காதே கேக்காதவருக்கு இசை எப்படி புரிந்தது ...?
பீதோவான் ......
ஒரு ஆச்சிரிய புதிர் ....

பிறந்தது 17 டிசெம்பர் 1770 , மறைந்தது 26 மார்ச் 1827 ...ரோமர் பாணி இசையிலிருந்து மேலையிசையை நவீன காலத்திற்கு கொண்டு வந்தவர்களில் இவர் மிக முக்கியமானவர் ...இவரது அழியா புகழ் பெற்ற படைப்புகள் இன்றளவும் உலக மேலை இசையை கட்டுண்டு வைத்திருக்கிறது ...

27 வயதில் தனது கேட்க்கும் திறனை இழந்துவிட்ட பீதோவான் அதன் பின் தான் தனது பிரமிக்க வைக்கும் சிம்பனிகளை உருவாக்கினார் ...

மூளைக்குள்ளாக சத்தத்தை நாம் கண்டு உணர முடியும் அந்த சத்தங்களை மீண்டும் மீண்டும் பலமாதிரி கொட்டி கலந்து உருவாக்கி ...இசை....இசை சரங்கள் ....

இசை சரங்கள் அப்படினா .....எந்த எந்த சத்தங்களை எவ்வளவு முறை அடுக்கி ...எந்த வரிசையில்....அழுத்தமா ..சத்தமா...எவ்வளவு நீளத்திற்கு... மெல்ல , சத்தமா , நீட்சியா .....இப்படி ஒரு தொகுப்பா .... போர்முலா மாதிரி உருவாக்கி அதை எழுதி வைத்தால் அது தான் இசை சரங்கள் ...

...உங்களிடம் ஹெட் போன் இருந்தால் இந்த விடியோவை கேளுங்கள் 


வீடியோவில் வரும் இசை பீதோவனின் ஐந்தாவது சிம்போனி ...இந்த இசை சரங்களை உருவாக்கும்போது பிதோவான் கிட்ட தட்ட கேட்கும் திறனை முழுதும் இழந்துவிட்டார் ...



சத்தங்கள் இப்படி மூளைக்குள் உருவாக்கி அதை ( கற்பனை பண்ணி ) பலமாதிரி கலந்து வித்தை காட்ட ரொம்ம்ம்ப நாபக ஆற்றலும் ...ஏகப்பட்ட கவனமும் வேண்டும் ...

ஒருமுறை தனது ஒன்பதாவது சிம்பனியை இசைத்து விட்டு ....திரும்பி பார்வையாளர்களை பார்த்த பீதோவான் ....எழுந்தது நின்று கரவொலி எழுப்பிகொண்டிருந்த பார்வையாளர்களின் மவ்ன கை தட்டலை பார்த்து கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தாராம்....

பல நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து இசை சரங்களை உண்டு பண்ணும் போது தூக்கம் வராமல் இருக்க தண்ணிர் உள்ள வாளியில் தலையை பல நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைத்திருப்பாராம் இந்த பழக்கம் கூட அவரது கேட்கும் திறனை அழித்திருக்கும் என்று நினைத்தார்கள் ...

தனது நண்பர்களுடன் பேசுவதற்கு அவர் பயன் படுத்திய நோட்டு புத்தகம் அவரது உணர்சிகரமான் மன நிலையை இப்போதும் படிபவருக்கு உணர்த்துவதாக இருக்கிறது அவரது நண்பர்கள் தாங்கள் சொல்ல வேண்டியதை அந்த நோட்டு புத்தகத்தில் எழுதி காட்ட அதை படித்து தனது பதிலை பிதோவான் அதில் எழுதுவார் ...

பல பெண்கள் இவரை விரும்பிய போதும் ..இவர் விரும்பிய பிரபுக்கள் பரம்பரையை சேர்ந்த இவரது காதலியை பிதோவானால் சமூக ஏற்ற தாழ்வால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை ...

தனது சகோதரர் மீது அளவில்லா அன்பை வைத்திருந்தார் ....தனது சகோதரரின் இறப்புக்கு பின் அவரது மகனை வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார் ...

காது கேளாமை , அடிக்கடி சூழ்ந்து கொள்ளும் வறுமை , தனிமை , பலவகை நோய்கள் ...இப்படி பல இடர்பாடுகள் இருந்த போதும் அவற்றுக்கு மத்தியில் பீதோவான் படைத்த இசை சரங்கள் அவர் இசை வழியே வாழ்ந்திருக்கிறார் என்பதை இன்றும் பறை சாற்றி கொண்டுள்ளன  ...

சரி இதெல்லாம் இருக்கட்டும் ...எங்க நீங்க இப்ப உங்க காத நல்லா மூடிக்கிட்டு மனசுக்குள்ள அதாங்க மூளைக்குள்ள சத்தத்தை உருவாக்கி ஒரு சுரம் எழுதுங்க பார்ப்போம் ....என்ன ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் வரும் ஆனா சுவாரசியமா இருக்கும் .... ட்ரை பண்ணுங்க ......போக போக நேரம் போறதே தெரியாது ....


Friday, October 11, 2013

சூப்பர் நோவா - பகுதி 1


மேலே உள்ள படம் சூப்பர் நோவாவுடன் நம்ம சூரிய குடும்பம் ஒரு ஒப்பிடு 

போன பதிவில் நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பு பத்தி சொல்லியிருந்தேன் ...நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் முடிவாக பெரிசாக வெடிச்சி இறந்து போகும் அந்த நிகழ்வுதான் சூப்பர் நோவா ..... 100 மில்லியன் சூரியர்களின் வெளிச்சத்துடன் பெரிசா வீங்கி வெடிச்சி களோபரம் ... முடிவில் ஏகப்பட்ட நியுற்றினோ துகள்களை அள்ளிவிசி கொண்டு வான வேடிக்கை ....இப்படி வெடிச்சி ரெண்டு வகையா மாற்றம் அடையும் 

முதல் வகை 
வெடி மையத்தின் காந்த அடர்த்தி அதிகமாகி அக்கம் பக்கம் இருக்கும் குட்டி நட்சத்திரங்களை உள்ளுக்கு இழுத்துகொண்டு இன்னும் வலுவான காந்த மைய்யத்தை உண்டு பண்ணிகிட்டா கொஞ்ச நாள் கழிச்சி கரும் துவாரம் அதாவது ப்ளாக் ஹோல் ( black hole ) ஆகிடும் ...

ரெண்டாம் வகை 
அப்படி ரொம்ப காந்த ஆற்றல் உண்டாகலனா நியுற்றினோ நட்சத்திரமா வெள்ளைய வெளிச்சம் தரும் குட்டி நட்சத்திரமா ஆகிடும்


மேலே உள்ள படம் துசு கூட்டத்தில் இருந்து பிளாக் ஹோல் வரை நடக்கும் மாற்றம் பற்றிய விளக்கம் 

முதல் வகையான் பிளாக் ஹோல்ங்கிறது ...ரொம்ப ரொம்ப கடுமையான் காந்த சக்தி இருக்குறதால வெளிச்சம் கூட அதனோட ஈர்ப்பு சக்தியிலிருந்து தப்ப முடியாது ...விளைவு கருமையா வெட்ட வெளில கண்ணுக்கு தெரியம் இருக்கும் ....

( வெளிச்சம் அப்படின்னு நாம் சொல்லுறது போட்டான் அப்படிங்கிற சக்தி பொட்டலங்கள் ... இந்த பொட்டலம் வெடிச்சி அலை அலையா மாறும் திரும்ப கூட்டு சேந்து போட்டான் பொட்டலமா மாறும் ....
இதன் அடிப்படை மின் காந்த கதிரியக்கம் ...இந்த போட்டான் துகள்கள் அணுக்குள்ள இருக்குற எலக்ட்ரான் , ப்ரோட்டான் , நியுட்ரான் வகையறாக்களை இன்னும் பொடுசு போடுசா உடச்சி பாத்தா அதுக்குள்ள இருக்கு இப்படி உடச்சி உள்ள என்ன நடக்குதுன்னு ஆராய்ச்சி பண்ணுறதுதான் குவாண்ட்டம் அறிவியல் ...

சரி விசயத்துக்கு வருவோம் ...ஆக வெளிச்சம் அப்படிங்கிறது துகள்களாகவும் அலையாகவும் இருக்கும் மின் காந்த கதிர் இயக்கம்...இவை ஒரு பொருளின் மீது பட்டு பிரதிபளிபதாலதான் நமக்கு அந்த பொருள் தெரியுது ....  நம்ம முன்ன சொன்ன ப்ளாக் ஹோலின் காந்த ஆற்றலுக்கு தப்ப முடியாம வெளிச்சம் அதுக்குள்ள போய் ஐக்கியம் ஆகிடும் ...)

இப்படி சூப்பர் நோவா வெடிக்கும் போது அதிலிருந்து வெளியே வீச படும் துகள்கள் ஒரு நொடிக்கு 15,000 முதல் 40,000 கிலோமீட்டர் வேகத்தில் துக்கி விசப்படுது ... வேதி தனிம அட்டவணையில் இரும்பு மற்றும் இரும்புக்கு மேலான ஸ்காண்டியம் , செரியம் , லுத்தியம் , பிளாட்டினம் , தங்கம் , போன்ற கன தனிமங்கள் இந்த சூப்பர் நோவா வெடிப்பதால் தான் உண்டாகுகின்றன ... ( வேதி தனிம அட்டவனையை பற்றி தனியா ஒரு பதிவில் )

சூப்பர் நோவா வெடிக்கும் போது அதனுள் அணு பிளவு நடபதில்லை மாறாக நியுற்றினோ பிணைப்பு நிகழ்வதால் தான் கன தனிமங்கள் உருவாகுகின்றன ..... இப்படி நடக்கும் நியுற்றினோ பிணைப்பு அதிவேக மற்றும் மிகவும் வேகம் குறையந்த முறையில் நடக்கிறது...

அடுத்த பதிவில் சூப்பர் நோவா ஏன் வெடிக்குது ...

Thursday, October 10, 2013

நாபக கிணறு




நாபக கிணறு :

காலைலேயே என்னமோ திடிருன்னு எங்க பாட்டி நாபகம் வந்துச்சி ... எனக்கு நினைவு தெரிஞ்சி ரொம்ப கெம்பிரமான கிழவி ....

என் தாத்தாவுக்கு என் பாட்டி ( லீலா ப்ளோரா ) ரெண்டாவது மனைவி , பெரிய பாட்டி (ஆலிஸ் ஞானம்) தரங்கம்பாடில மிராசு வீட்டு பெண், கொஞ்சம் கர்வம், கொஞ்சம் திமிரு, கொள்ள அழகு ( வயசானபிறகும் ) ஒரு மிடுக்கு, ஒரு தோரணை எல்லாம் கலந்த செல்ல மகள் ..

எங்க தாத்தா (முருகன்) பட்டுகோட்டை பக்கம் அனைகாடு கிராமத்தில் சண்டியரா சுத்திகிட்டு இருந்தாப்ல , தாத்தாவோட அப்பா அவங்க முன்னோர்கள் எல்லாம் மன்னர் காலத்துல படைமுழங்கியா இருந்தார்களாம் ...

சரி நான் ஆரம்பிச்ச விசயத்துக்கு வரேன் ... எங்க தாத்தா முதல் கல்யாணம் பண்ணியபிறகும் மைனராவே சுத்திகிட்டு இருந்திருக்கார் ..அப்படி அடிக்கடி கும்பகோணம் வரும்போது எங்க பாட்டிய எங்க பாத்தாருன்னு தெரியல .... காதல் ...

ஒரு கட்டத்துல எங்க பெரிய பாட்டிக்கு ( இவங்களுக்கு எட்டு பிள்ளைங்க ) விசயம் தெரிஞ்சிபோச்சி ....நம்ப மைனர பஞ்சாயத்து பண்ணி ஊரவிட்டு தள்ளிட்டாங்க ....அவரும் காதலிய கட்டிக்கிட்டு கும்பகோணம் கோமானா ஆகிட்டாரு ...

எங்க பாட்டி உயர்நிலை பள்ளி ஆசிரியரா வேல பாத்து ( இவங்களுக்கு பத்து பிள்ளைங்க ) எங்க தாத்தா உள்பட பதினொரு உருப்படியையும் உருப்படியாகியிருகாங்க ...நம்ப மைனர் எங்கோ மெட்ராஸ் , மும்பைன்னு போய் யரோ ஒரு வாட்ச் மெக்கானிக்குகிட்ட வாட்சி சரி பண்ண கத்துகிட்டு ஊருக்கு வந்து தொழில ஆரம்பிச்சி இருக்கார் ...பழைய தஞ்சை மாவட்டதுள 60கள் வரைக்கும் மைனர் தான் பெரிய டெக்னிசியன் ...சம்பாதித்த காசெல்லாம் நம்ப மைனருக்கு கை செலவுக்கே போதலயாம்..

கோடை விடுமுறைக்கு எல்லா குடும்பமும் எங்க பாட்டி வீட்டுல பத்து பதினைந்து நாள் டேரா போடுவோம் ..

வீட்டு உள்முத்ததுல கெண்ட மீனுங்கள கருக்கலோட போய் வாங்கி வந்து பெரிய தண்ணி ட்ரம்ல விட்டு வச்சியிருப்பாங்க...நாங்க பொடுசுகள் எல்லாம் அத வேடிக்க பாக்கறதும் பெருசுக எங்கள விரட்டுரதுமா பத்து பத்தர மணியாகிடும் ... பாட்டி வந்து டேய்னு ஒரு சத்தம் போட்டதும் போதும் எல்லாபயலும் டக்குனு கானாபோயிடுவானுங்க ...

மே மாசத்து வெய்யில் வீனாபோகாம எங்க போடுசுகளிலேயே கொஞ்சம் வளர்ந்த பயலுவ கட்டய எடுத்துக்கிட்டு எங்களயும் கூட்டிகிட்டு காடோ சரணமோனு சுத்த கிளம்பினா ரெண்டு ரென்ற மணிக்கு பசியெடுக்கவும் வீட்டுக்கு வருவோம்..வீட்டுல எல்லா பெருசுகளும் சாப்பிட்டு முடிச்சி கத அளந்துகிட்டு இருக்கும் ..ஆனா பாட்டி நாங்க வந்ததும் கைல மாட்டின பயலுகள எங்கடா போய் பெரண்ட்ட்டு வரிங்கன்னு தொம்மு தொம்முன்னு முதுகுல நாலு சாத்தபோட்டும் ...

அடி வாங்கினவன் வாங்காதவன் எல்லாம் கைய கால கழிவிட்டு வெளிமுத்த தாழ்வாரத்துல அர வட்ட வடிவுல ஒக்கர்ருவோம் ..பாட்டி எங்க நடுவுள உக்காந்து ஒரு அன்ன கூடைல சோத்த போட்டு மீன் குழம்ப ஊத்தி கிளறி எங்க எல்லாருக்கு ஊருண்ட புடிச்சி கைல குடுக்கும் ..அதுலயும் எவனாவது உஸ் உறைகுது அப்படினு சொன்னா கடலெண்ண ஊத்தி பிசரிகொடுக்கும்...அப்படி ஒரு ருசியா இருக்கும்...

சாப்பாடு முடிஞ்சி எல்லாபயலும் வரிசைக்கா தாழ்வாரத்துல படுத்து தூங்கும் போது பாட்டி கட்டில்ல படுத்துகிட்டு சுருட்டு பிடிக்கும் ..அந்த சுருட்டு புகை வாசமும் நாட்டு ஓடு வழியா உள்ளிறங்கும் வெய்யில் சூடும் ...நாங்கெல்லாம் வேர்க்க வேர்க்க தூங்கி போவோம் ....

எங்க அம்மாவா இல்ல சின்ன அத்தையா யார் சொன்னாங்கனு தெரியல ..எங்க பாட்டி யோசன பண்ணா சுருட்டு பிடிக்கும்னாங்க ..நானும் பாட்டிய கவனிச்சி இருக்கேன் பாதி சுருட்ட திரும்ப எடுத்து புகைசிகிட்டே எங்கையோ பாத்துகிட்டிருக்கும் .. ஒரு தடவ மதியம் பாட்டி சுருட்டு புடிக்கும்போது நான் என்ன பாட்டி யோசிக்கிரனு கேட்டே புட்டேன் ..அப்பதான் எங்க பாட்டி சிரிச்சி நான் பாத்தேன் ...மெல்ல சிரிச்ச பாட்டி ஒன்னும் இல்லடா ..வா வந்து கட்டில்ல படுதுக்கோனு கூட படுக்க வச்சிகிச்சி ..கொஞ்ச நேரம் சுருட்டு புக கஷ்டமா இருந்துச்சி..நான் அப்படியே தூங்கிபோய்டேன் ...

பாட்டி சாகபோற ஒரு வாரத்துக்கு முன்னாடி எனக்கு சாப்பாடு போட்டபோ கூட என் பக்கத்துலேயே உக்காந்து நான் சாப்பிட சாப்பிட எனக்கு சோத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா குழம்பு போட்டுச்சி ... அப்ப கூட ஏதோ யோசனயோட என்ன டா எப்படி படிக்கிற ..பாடம்லாம் புரியுதா அப்படின்னு கேட்டுச்சி ...

இப்ப கூட எனக்கு பாட்டிய நெனைக்கும் போது ... பாட்டி கிட்ட என்ன பாட்டி யோசிகிரனு கேக்கதோணுது .....

சுவரொட்டி விளம்பரம்



அபீட்டு  :

உடாபுடியா நட்டா இங்க தான் நடுவேன்னு டெலெண்ட் காட்டி ..கம்பிட் பண்ணி ..... நெறைய மொரப்பு வாங்கி ..... கிளாப்ஸ் வாங்கி .....ஜிகு ஜிகு கலர் லைட்டுக்கு கீழே ஊக்கு விப்பான்களுடன் ....ஆமா அந்த பண்ட் பெர்போர்மேன்ஸ் சரியில்ல ....என்ன வேல்யு போகுது .... அண்டர் கட் யார் பண்ணுரா ....மிக்ஸ்டு பேக் லாம் நமக்கு சரி வராது .... இப்படி ஜம்பம் அடிச்சி ... 2007 ல நடந்த உலக பொருளாதார மோசடில 9 மாசத்துல ஆன் ரோட்டுக்கு வந்தவங்கள்ள நானும் ஒருத்தன் ........ அந்த வீர வரலாறு சுருக்கமா

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்ல நடந்த மாதிரியே ...கொஞ்சம் நம்ப ஊருக்கு ஏத்த மாதிரி வெட்டி ஒட்டி சப்- ப்ரைம் மார்க்கெட் நாடக்க ஆரம்பிச்ச நேரம் .... (சப்- ப்ரைம் மார்க்கெட் அப்படினா என்னானு தெரியாதவங்க...அதுக்குகென்னா இப்போனு கேக்கறவங்க  நேர பதிவின் கடைசி பத்திக்கு போங்க ....மத்தவங்க பிலோவ பாலோ பண்ணுங்க ...

ஊருக்கெல்லாம் நாங்க ..மார்க்கெட் அப்படி.....  மார்க்கெட் இப்படி ...அப்படியே மேலே.... மேலே ..... மேலே ..... போய்கிட்டே இருக்கும் .....அது இதுன்னு கணக்கெல்லாம் போட்டு காட்டி கிரின் பண்ட் ( ஊரான் வீட்டு பணத்த எந்த கேள்வியும் இல்லாம பண்ட் மேனேஜர் எப்படிவேனா ..எங்க வேனா முதலிடு பண்ணலாம் அதுக்கு இப்படி ஒரு பேரு ) ரெடி பண்ணிக்கிட்டு இருந்தோம் .....

ஒரு கட்டத்துல நாங்க போட்ட கணக்க பாத்து நாங்களே ஏமாந்து ஆஆ- நு வாய பொலக்கர மாதிரி ஆகிபோச்சி ......அடடா இப்படி ஒரு வாய்ப்ப நாமளும் யூஸ் பண்ணிக்கணும் அப்படின்னு நெனச்சி ..பெருசா போட்டா பெருசா அள்ளலாம்னு  ( பேராச )..... எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணத்துக்கு மூச்ச போட்டோம் ....

நான் அதுவரை கொட்ட நூத்து வச்சியிருந்த எல்லாத்தையும் கணக்கு பண்ணி பாத்தப்ப ..போதலையே அப்படின்னு தோணிச்சி ...என்ன மாதிரி பல பயலுங்க ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் அப்படின்னு இருந்தப்ப ..... " மாஸ்டர் டாக்ஸ் " ( இந்த பிரைவேட் பேங்க்ல ப்ரொடக்ட் டிசைன் பண்ணுறவங்கள அப்படிதான் சொல்லுவோம் ) ஒரு நூதன திட்டம் சொன்னாய்ங்க ...

நீங்க இன்வெஸ்ட் பண்ண நாங்களே கடன் கொடுக்கிறோம் ...அந்த கடனை கொண்டு நீங்க வாங்கும் பங்குகளை நாங்கள் ஜமீனா வச்சிக்கிறோம் ....மார்க்கெட் மதிப்பு ஏற ஏற ....கொஞ்சம் கொஞ்சமா நாங்களே அந்த பங்குகள வித்து கடன முடிச்சிக்கிட்டு ...மிதம் இருக்கும் பங்குகள நீங்க காச ஆக்கசொன்ன ஆக்கிதறோம் இல்லேன நீங்க அத அப்படியே தொடர்ந்து வச்சிகிட்டலும் சரின்னாங்க ....நாங்களும் ஆஹா ஓஹோ ..ப்ரில்லியண்ட் ....அப்படினுட்டு கலத்துல குதிச்சிட்டோம் ...

எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சி .... திடிருன்னு அமெரிக்காவுல எல்லாபயலும் மஞ்ச நோட்டிஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டாய்ங்க .....அதனால்தான் இங்க நம்ப காலி அப்படின்னு தெரிஞ்சி ..... உசாராகரத்துக்குள்ள ...கட கடனு சிட்டு கட்டு மாதிரி மார்க்கெட் மதிபெல்லாம் விழுந்து ...... எங்க பாத்தாலும் ரெத்த சகதி..... பல பேர் செத்தே போய்டாணுவ .....இந்த  அல்லேலோ கொல்லேலோ முடியறதுக்குள்ள   இங்க எல்லாத்தையும் ஊத்தி முடிட்டாய்ங்க ......

அப்புறம் என்ன .... கழுத்துல கத்தி வைக்காத குறைதான் ....கடன வாங்கினவன் எல்லாம் உடனடியா பணத்த கட்டிபுட்டு .....வாங்கி வச்சிருக்க பேப்பரெல்லாம் எடுத்துகிட்டு ஓடி போயிடுங்க அப்படின்னு ஒரே பஞ்சாயத்து .....வேற வழி ....எல்லாத்தயும் போட்டு அடிச்சி ஒரு வழிய கடன முடிச்சி ...வெத்து பேப்பர டிமாட்  அக்கௌன்ட்டுக்கு மாத்திகிட்டு வெளியே வந்தப்ப ......ரெண்டு மாசத்துக்கு..... "  த மாஸ்க்  "  படத்துல வருமே ஒரு கேரெக்டர் அது மாதிரி கண்ணு முழி ஒரு அடிக்கு வெளிய வந்து ...நாக்கு தரயில பட ...... பே ...னு இருந்துச்சி ..... 

வாங்குன அடிக்கு முதலாம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாடுறத்துக்குள்ள ....மிச்ச சொச்ச ...மீராந்தியெல்லம் வழிச்சி ... டாபீ தயார் பண்ணுறோம்முனு இறங்கி ....சக்கர வேல 15 மாசத்துல 300 % ஏறி ( இதுக்கு பின்னாடி கம்மாடிட்டி அப்படின்னு இன்னொரு அபத்தம் இருக்கு .... அத அப்புறம் சொல்றேன் )..... இருந்த கோவணத்தையும் கிழிச்சிகிட்டு ..... முழிச்சி பாத்தா .....வெட்ட வெளி ...சுத்திலும் கட்டாந்தர ......கண்ணனுக்கு எட்டுன தூ...தூ...தூ...தூ ரம் வரிக்கும் பொட்டல் காடு ......எங்குகுகுகுகும் .......நிசப்தம்ம் ம் ம் ம் ம்  .........

2009ல .... மேனே ஆன் ரோடுமேன் தா  ......   காம் , காண , கரென்சி ...எல்லாம் காலி .....

அப்புறம் என்ன ...அது இன்னொரு தபா ....

***************************

சப்- ப்ரைம் மார்க்கெட் அப்படினா என்னானு தெரியாதவங்களுக்கு .........

"" -- நீங்க தப்பிசிட்டிங்க சார் -- ""  

நம்ம ஊரு மங்காத்த மாதிரி ....ஒரு டெக்னிக்கலான ப்ரெம்மாண்ட சூதாட்டம் ...... சுருக்கமா என்னானா ..... கடன திருப்பி கட்டக்கூடிய வருவாய் உள்ளவங்க ...இல்லாட்டி அதுக்கு உரிய சொத்து மற்றும் பிற ஜாமீன் உள்ளவங்க ....இவங்க உள்ள சந்தைக்கு ப்ரைம் மார்க்கெட் ....அதாவது முதல் தர சந்தை அப்படின்னு பேரு ........அப்படி இல்லாம ....ஒரு வேல கஞ்சிக்கே அல்லல் படுறவங்க  ...... ஜாமீன் கடல்லேயே இல்லையாம் அப்படின்னு சொல்லுற அப்பாவிஸ் ...... இவங்க உள்ள சந்தைக்கு சப்- ப்ரைம் மார்க்கெட் .... அதாவது இரெண்டாம் தர சந்தை அப்படின்னு பேரு.....   

இப்படி அப்பாவிஸ்களுக்கு  வீடு வாங்க வாங்க கடன் கொடுத்து ..... ( தட்டு முட்டு சாமான் வாங்கெல்லாம் கொடுக்க மாட்டாய்ங்க ...அதெல்லாம் பொசுக்குனுதான் வட்டி வருவாய் தரும் அதனால வீடு வாங்க மட்டும் தான் முக்கியத்துவம் தருவாய்ங்க ) ..... சரி விசயத்க்கு வருவோம் ....


இப்படி கொடுத்த கடன ......அந்த கடன் அடைக்க தரபட்டிருக்கும் காலம் ( ஈ. எம் . ஐ ) அதற்கான வட்டி விகிதம் இதெல்லாம் பொருத்து கடன்களை  குரூப் க்ரூப்பா பிரிச்சி ...அதையே ஒரு பாண்டா ரேட் பிக்ஸ் பண்ணி ஒருத்தன் தலைல காட்டுவாங்க ..அத அவன் ...... இன்னொருத்தன் தலைல காட்டுவான் ..இப்படியே போகும் ....

கடைசில நம்ம அப்பாவிஸ்ங்க கடன கட்ட முடியாம போனப்ப ... கடனேயே ஒரு பொருளா வியாபாரம் பண்ணாய்ங் பாருங்க அவய்ங்க ......   அவய்ங்களுக்கு கடன் கொடுதவைங்க ... .. இப்படி எல்லா பக்கிகளும்.....அடிச்சிகோ ...... புடிசிக்கோனு ஆளாளுக்கு வந்த ரேட்டுக்கு அந்த கடன் பாண்ட விக்க ஆரம்பிக்கவும் ......மொத்த அமெரிக்க பொருளாதாரமும் தொபேள்னு விழுந்துடிச்சி ...உஸ்ஸ்ஸ்ஸ் அப்பாட ....இப்ப புருஞ்சிதா .....

எப்போய்

எப்போய்