Thursday, May 15, 2014

பிரபலங்கள் பலவிதம்


யாரோ ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்து ... பள்ளிக்கூடம் போயி படிச்சி .. காதல் , சினிமா , கிரிகெட்  போபியா எதுவும் புடிக்காம .. வேலைத்தேடி .. பிசினஸ் செஞ்சி .. பத்திரிகைங்க மாங்கு மாங்குன்னு தங்கள பத்தி செய்தி போட ... பொதுமக்கள் இவங்கள பிரபலங்கள் அப்படின்னு கொண்டாட  .. ஸ்டார் அந்தஸ்துடன் வாழும் ... வாழ்ந்த சில பிரபலங்களின் வாழ்க்கையில ... இப்படி எல்லாம் நடக்குமா ... ஆமாம் நடக்கும் ... நடந்திருக்கு .. அப்படின்னு எல்லோரும் ஆச்சிரியப்பட்டு போகும் அளவுக்கு இருந்திருக்கு ...
இன்னிக்கு அப்படி ஒரு ஆச்சரிய பிரபலம் ஜார்ஜ் பி புர்டெல் பத்தி ...



புர்டெல் அமெரிக்க விமான படையின் தீரம் மிக்க படை விமானிகளில் ஒருவர் .. இரெண்டாம் உலக யுத்தத்தின்போது ... நாசி படைகளின் மீது நடந்த வான் தாக்குதல்களில் பன்னிரெண்டு மிகப்பெரும் தாக்குதல்களில் பங்கெடுத்து எதிரிகளை கதிகலங்க வைத்தவர் ...
யுத்தத்திற்கு பிறகு .. பத்திரிக்கை துறையில் கால் வைத்த புர்டெல் அதிலும் அசைக்க முடியா ஜம்பவானாக இருந்தார் ... அதிலும் குறிப்பாக ... அரசியல் , கலை , பொதுவாழ்க்கை , சினிமா , இப்படி எல்லாவற்றையும் கிண்டலாடித்து கலாய்த்து எழுதி 1970களிலேயே 2,000,000 மேல் வாசகர்களின் பேராதரவை பெற்ற ( MAD magazine ) மேட் சஞ்சிகையின் நிர்வாக குழுவில் நிர்வாகியாக 1969 முதல் 1981வரை பதவியில் இருந்து மிக சிறப்பாக பங்களித்தவர் ...
புர்டெல் எழுதும் ஒவ்வொரு வரியும் , அவர் நக்கல் அடிக்கும் ஒவ்வொரு செய்தியும் மக்களின் மத்தியில் மிக பெரிய சலசலப்பை ஏற்படுத்தி வந்தது ... அமெரிக்க அரசியல் வாதிகளாகட்டும் , சினிமாகாரர்களாகட்டும் , பிரபலங்கலாகட்டும் எல்லோரும் புர்டெல் இந்த வாரம் தங்களை கலாய்க்காமல் இருந்தால் அழகு குத்தி தீ மிதிப்பதாக குல தெய்வத்திற்கு வேண்டாத குறைதான் ... அந்த அளவிற்கு அவரது நக்கல் வரிகள் சுளீர் சுளீர் ...
இப்படி தடியெடுத்தவன் தண்டால் காரன் மாதிரி ..பத்திரிகை உலகில் ஒரு சண்டியராக புர்டெல் வலம்வந்து கொண்டிருந்த போது ... எல்லோரையும் அதிர செய்த ஒரு நிகழ்ச்சி நடந்தது ... டைம்ஸ் சஞ்சிகை வருடம் தோரும் இந்த ஆண்டின் உலகின் சக்தி மிக்க மனிதர் என்று குறிப்பிட்ட வருடத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபரின் பெயரை வெளியிடும் ...
வழக்கம் போலவே 2001 ஆம் ஆண்டிற்கான பெயர் தேர்தேடுப்பிற்கு டைம்ஸ் சஞ்சிகை அறிவித்தபோது ... ஏறத்தாழ 57 சதவித ஆன்லைன் ஓட்டுக்கள் புர்டெல்லுக்கு விழுந்தது தான் விபத்தே ... சரி மக்கள் புர்டெல்லை தேர்ந்தெடுத்து இருகிறார்கள் ..அவரிடம் ஒரு சிறப்பு பேட்டி எடுத்து அட்டைப்படத்துடன் ஒரு கட்டுரை போடுவோம் என்று  டைம்ஸ் பத்திரிக்கை காரர்கள் புர்டெல்லை தொடர்பு கொள்ள முயன்றபோது வெடித்தது வினை ....
எங்கெங்கோ ..யார் யாரிடமோ கேட்டும் டைம்ஸ் பத்திரிகை காரர்களால் 90 வயதான புர்டெல் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை ... இதற்காக டைம்ஸ் பத்திரிக்கையின் சிறப்பு குழு ஒன்று இரவு பகலாக புர்டெல்லை கண்டு பிடிக்க புலனாய்வு செய்ததில் அவர்களுக்கு கிடைத்த விடை ... 
"அப்படி ஒரு நபரே இல்லை "
அப்படி ஒரு நபரே இல்லை என்ற உண்மை தெரிய வந்ததும் டைம்ஸ் பத்திரிகை மட்டும் இல்லை ... புர்டெல்லின் வாசகர்கள் அனைவரும் அதிர்ந்து போயினர் .. புர்டெலின் எழுத்துகளால் பாதிபடைந்த பல பேர் ... அச்சச்சோ புர்டெல் அப்படின்னு ஒரு ஆளே இல்லியா ... போச்சுட .. அப்போ தங்களை கலங்கடித்து கொண்டிருந்த நபர் வேறு யார் என்ற புது பீதியில் தூக்கத்தை தொலைத்தனர் ...
பக் பக் மனசுடன் இருந்த தில்லு முள்ளு அரசியல் வியாதிகள் , நடிகர் நடிகைகள் ... இருட்டு பிரபலங்கள் என சகல பக்கத்திலும் ஏகப்பட்ட அரசியல் நெருக்கடி ஏற்படவும் .. அரசின் புலனாய்வு துறை களத்தில் குதித்து .. தோண்டி துருவி விசாரித்ததில் ... 1927ல் ஜயொர்ஜியா  தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த ஒரு சிறு தவறு தான் புர்டெல்லின் ஆரம்பம் என்று தெரிந்தது ..
1927ல் யாரோ ஒரு அட்மிசன் ஆபிசர் ( சேர்க்கை அலுவலர் ) கவன குறைவாக செய்தது  ..விளைவு தவறுதலாக இரண்டு சேர்க்கை அனுமதி படிவம்  எட் ஸ்மித் என்ற மாணவருக்கு வந்துசேர்ந்தது .. அவரும் விளையாட்டாக ஒன்றில் தனது பெயரையும் ..மற்றொன்டில் கற்பனையாக புர்டெல் என்ற பெயரையும் பூர்த்தி செய்து .. கல்லூரியில் சேர்க்கையும் செய்து விட்டார் ... 
ஸ்மித் தான் எந்த வகுப்பில் சேந்தாலும் அதில் புர்டெல் பெயரையும் சேர்த்து கொண்டார் ..தனது கற்பனை மாணவருக்காக வகுப்பு பாடங்களை செய்ததுடன் பரிச்சைகளையும் எழுதினார் .. ஒரு கட்டத்தில் சக மாணவர்களுக்கு உண்மை தெரியவும் ..அவர்களும் சேர்ந்து கொண்டு புர்டெல் எல்ல பரிட்ச்சையிலும் வெற்றி பெற்று பட்டமும் வாங்கும்படி செய்துவிட்டனர் ... 
ஸ்மித் மற்றும் அவரது சக மாணவர்கள் எல்லோரும் தொடர்ந்து தங்களுடைய கற்பனை வகுப்பு தோழன் புர்டெல்லை விமானியாக்கி இரெண்டாம் உலகயுத்தத்தில் ஐரோப்பாவின் மீது பறக்க விட்டனர் .. மேட் சஞ்சிகையிலும் அதே மாணவர்களால் புர்டெல்  புனை பெயரில் செய்திகள் வரும்படி மிக நேர்த்தியாக வழிவகுக்கப்பட்டது ...

கிட்டதட்ட 60 வருடம் மிக மிக சிறந்த நேர்த்தியுடன் துல்லியமாக இயங்கிய ஒரு குழுவால்  .. உலகின் கண்ணை கட்டி செய்யப்பட்ட  மிக நேர்த்தியான் கான் இவன்ட் இந்த புர்டெல் என்ற பிறக்காத மனிதனின் வாழ்க்கை ..
இன்று ஜயொர்ஜியா  தொழில்நுட்ப கல்லூரியில் எல்லோராலும் பெருமையாக கொண்டாடப்படும் முன்னாள் மாணவர் புர்டெல் ...பேஸ் புக்கில் கூட 5,000 நண்பர்களுடன் புர்டெல்லுக்கு  பக்கம் இருக்கிறது ... 

Thursday, May 8, 2014

கரும் விடியல், அத்தியாயம் 1 - வேட்டை தொடர்ச்சி...





ஓநாயும் எழுந்து கொண்டு தத்ரோவ்சிஸ்கியை பார்த்தவரே முன்னம் பற்கள் தெரிய ஊரும்மிய படி பக்கவாட்டில் நகர்ந்து அவன் மீதி பாய தயாரானது ....

தத்ரோவ்சிஸ்கியின் பலகீனமானா நொடியில் அவனை தாக்க அவனது நகர்வை கவனித்தபடி வெறியுடன் பாய தயாரானது அந்த ஓநாய் ... எந்த கணமும் ஆறடி நீளமும் நான்கடி உயரமும் இருந்த அந்த ஓநாய் தன்னை தாக்கும் என்பதை உணர்ந்த தத்ரோவ்சிஸ்கி வெலவெலத்து போய் தப்பி  ஓட வழி தெரியாமல் சற்று குனிந்தவாறே ஒரு கையில் கத்தியுடன் ஓநாயை எதிர் கொள்ள தயாரானான் ...

ஓநாயை பார்த்தபடி இருந்த தத்ரோவ்சிஸ்கியை சற்றும் எதிர் பாரா தருணத்தில் யாரோ சடேரென் அவன் மேல் சட்டையை பிடித்து பின்னுக்கு இழுத்தனர் .... இழுபட்ட வேகத்தில் இரண்டு மூன்று அடி பின்னுக்கு எகிறி போய் விழுந்த தத்ரோவ்சிஸ்கி தனக்கு முன்னால் அவனுக்கும் ஓநாயிக்கும் இடையே அந்த கருப்பு அங்கி மனிதன் நின்றுகொண்டு அந்த ஓநாயை உற்று பார்த்தபடி எதோ முனுமுனுப்பதை பார்த்தான் ...

இது என்ன விசித்திரம் கொலை வெறியுடன் இருந்த அந்த  ஓநாயின் முகம் வெறி தணிந்து அதன் கண்கள் ஏதோ பரிதாபத்துடன் பார்ப்பது போல் மாறிவிட்டதே என்று தத்ரோவ்சிஸ்கி கவனித்து கொண்டிருந்தபோதே ... அந்த ஓநாய் சட்டென்று சில அடிகள் பின் வாங்கி அப்படியே திரும்பி ... அடிபட்டது போன்று பலகீனமாக கத்திகொண்டே மலைமுகட்டை நோக்கி ஓடிபோயிற்று ...


நடந்தது என்ன ? எப்படி ? என தத்ரோவ்சிஸ்கி ஒன்றும் புரியாமல் மெல்ல எழுந்தவாரு அந்த கருப்பு அங்கி மனிதனை பார்த்து கொண்டிருந்தபோது மெல்ல தத்ரோவ்சிஸ்கி பக்கம் திரும்பிய அந்த கருப்பு அங்கி மனிதனின் முகம் ஒருவிதமான இறுக்கத்துடன் வெளிரி போயிருந்தது ...ஆனால் அந்த கண்கள் அப்பப்பா ..ஒரு இருபது கிலோ சுத்தியலால் அடித்தது போன்று அப்படி ஒரு கனமான பார்வை ... சில வினாடிகள் அந்த கண்களை பார்த்து கொண்டிருந்த தத்ரோவ்சிஸ்கி எதோ இனம்புரியாத இறுக்கத்தை உணர்ந்தான் ..

கொஞ்சம் நகர்ந்து கால்களை உறுதியாக ஊன்றி கொள்ள முயற்சித்தபோது எவ்வளவு முயன்றும் தன்னால் ஒரு அடி கூட நகர முடியவில்லை என்பதையும் ..தான் முற்றிலும் செயலிழந்து தன் முகத்தை கூட திருப்ப முடியாமல் உரைய்ந்து போய் நிற்பதையும் 
தத்ரோவ்சிஸ்கி உணர்ந்தான் .. 

மெல்ல சில அடிகள் அவனை நெருங்கி வந்த அந்த மனிதன் சில நொடிகள் அவனையே பார்த்து கொண்டிருந்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான் ... சுமார் பத்தடி விலகி சென்றதும் திரும்பி 
தத்ரோவ்சிஸ்கியை பார்த்த அந்த மனிதன்  செயின்ட் பீட்டர்ஸ் பார்கில் சந்திப்போம் இப்போது நீ வீட்டுக்கு போகலாம் என் கூறிவிட்டு மீண்டும் நடக்க தொடங்கினான் ...

சட்டென்று அடைபட்ட இறுக்கமான பெட்டியிலிருந்து வெளிவந்தது போன்று உணர்ந்த தத்ரோவ்சிஸ்கிக்கு தொண்டை உலர்ந்து போயிருந்தது .. சைபீரிய கடும் பனி குளிரிலும் தன் உடல் முழுதும் கணப்படுப்பிற்கு அருகில் இருந்தது போன்று வெம்மைமையானதை உணர்தான் ...





Friday, May 2, 2014

கரும் விடியல் - அத்தியாயம் 1 - வேட்டை

கதையின் பின்புலம் ரஷ்யா ..அதனால கதையில வர்ற நபர்களும் , இடங்களும் ரஷ்ய பெயரகா இருக்கும் .. பொதுவா ரஷ்ய நூல்களை வாசிச்சி பழக்கம் இல்லாதவங்களுக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் நாக்கு வலுக்கும் ஆனா ரெண்டு மூனு அத்தியாயம் போனபின்னாடி ...பெயர்கள் பழகிடும் ...

வரலாற்று பின்னணில கதை நடந்தாலும் உண்மையும் கற்பனையுமா ஏகத்துக்கு கலந்து எழுதியிருக்கேன் .. அதே சமயத்தில் என்னால் ஆனா வரை வரலாற்று செய்திகளை தீர விசாரிச்சும் , கோப்புகளை படிச்சும் உறுதி செஞ்சிகிட்டு தான் எழுதி இருக்கேன் ... இருந்தாலும் சில இடங்கள்ள செய்தி பிழை வரலாம் ..

அப்புறம் வழக்கம் போல எழுத்து பிழைக்கு பஞ்சம் இருக்காது ... எழுத்து பிழை தொடர்பா உங்க நறுக் நறுக் கொட்டுகளை இன் பாக்ஸ்ல சொன்னாக்கா .. யாருக்கும் தெரியாம நான் எடிட் பண்ணி சமாளிச்சிக்க உதவியா இருக்கும் ..

இப்போ ....... ஒரு ஊர்ல ...


அத்தியாயம் 1 - வேட்டை 





லொள் ... கிர்ர்ர் .. லொள் ..லொள் ... ஏய் அந்த பக்கமா வா ... வேகமா வாங்க கிளை மான்கள் கூட்டம் ஓடிடும் .... ம் ம் ம்  சிக்கிரம் ....

டுமில் , டுமில் ...அடுத்தடுத்து  கேட்ட துப்பாக்கி சந்தங்களும் , வேட்டை நாய்களின் குறைப்பும் அந்த சைபீரிய காட்டு பகுதியையே அதிர செய்து கொண்டிருந்தது .... பயந்து ஓடி கொண்டிருந்த மான்கள் கூட்டம் மிரண்டு நிமிடத்துக்கு ஒருமுறை திசை மாறி ஓடி கொண்டிருந்தது ....

சைபீரிய பைன் மர காட்டு பகுதிக்கும் ..அங்கு பொழியும் கடும் பனிக்கும் நன்கு பழக்கமான வேட்டை நாய்களும் , வேட்டை காரர்களும் ஒரு அடி ஆழத்திற்கு கால் பனியில் பதிய பதிய மூச்சிறைக்க ஓடி கொண்டிருந்தனர் ..



தன் தாத்தாவை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்த தத்ரோவ்சிஸ்கி தன்னால் முடிந்த மட்டும் வேகமாக ஓட நினைத்தான் ஆனால் அவன் போர்த்தியிருந்த கம்பளி தோல் ஆடைகளும் கனமான பூட்சும் அவன் கால்களை பனியில் இன்னும் ஆழமாக பதிய செய்தன தவிர வேகமாக ஓட உதவவில்லை ..

எவ்வளவு முயற்சித்தும் அவன் வேகமாக நடக்க முடிந்ததே தவிர ஓட முடியவில்லை ...இந்த வேட்டைக்கு வருவது பதிமூன்று வயதான 
தத்ரோவ்சிஸ்கிக்கு இது நான்காவது முறை ... தன் தந்தையை பார்த்தே இராத தத்ரோவ்சிஸ்கியும் அவன் தங்கையும் அம்மாவும் அவனது தாத்தா வீட்டில் வாழ்ந்து வருகின்றனர் ... இந்த வருடம் தான் அவன் தாத்தா அவனை வேட்டைக்கு பழகிக்கொள்ள அழைத்து வர ஆரம்பித்தார் ... கடந்த மூன்று முறை போலவே இந்த முறையும் தத்ரோவ்சிஸ்கினால் அந்த வேட்டை கூட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஓட முடியவில்லை ...

பனியில் அழுந்தி வேகமாக நடக்க முயன்றதில் மூச்சி திணறிய தத்ரோவ்சிஸ்கி அருகில் பைன் மரங்கள் அடர்ந்து பனி மூடிய இருந்த மேட்டின் மீது ஒருவழியாக மூச்சு வாங்க ஏறி பைன் மரம் ஒன்றின் மீது சாய்ந்து தன்னை அசுவாசபடுத்தி கொண்டபோது .. அந்த வேட்டை கூட்டம் வேகு தூரத்தில் போவது தெரிந்தது ...



இனி இரவு தங்க முகாம் அமைக்கும் போதுதான் முப்பது சொச்சம் பேர் கொண்ட அந்த வேட்டை குழு தான் இல்லாததை உணர்ந்து கொள்ளும் ... பாவம் தாத்தாதான் சற்று பதற்றம் அடைவார் .. இருந்தாலும் கிராமத்துக்கு திரும்பி போக தனக்கு வழி தெரியும் என்பது தத்தாவுக்கும் மற்றவர்களுக்கும் தெரியும் என்பதால் தன்னை தேடி வர மாட்டார்கள் என்பது தத்ரோவ்சிஸ்கி மனதில் ஓடியது ...

சரி இனி என்ன செய்யலாம் என் அப்படியே அந்த மரத்தின் அடிபகுதியில் சாய்ந்து உண்ட்கார்ந்த தத்ரோவ்சிஸ்கிக்கு யாரோ தன்னை பார்ப்பது போல் இருந்தது ... சுதாரித்து விழிப்பான தத்ரோவ்சிஸ்கி தனது வேட்டை துப்பாக்கியை இருக்க பிடித்து கொண்டு உடலை அசைக்காமல் மெதுவாக சுற்றும் முற்றும் கூர்ந்து கவனித்தான் ...

ஆ ...அது என்ன ஒரு உருவம் அடுத்த முகட்டின் மீது நின்று கொண்டு இங்கேயே பார்ப்பது போல இருக்கின்றதே ..இவ்வளவு கடும் குளிரில் எப்படி இவர் ஒரு நீண்ட அங்கியை மட்டும் அணிந்து கொண்டு சலனமின்றி நிற்கின்றார் .... 

அந்த நபர் தன்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் .. மெல்ல குனிந்தவாறே நகர்ந்து அடுத்த முகட்டின் பின் வழியாக ஏறிய  தத்ரோவ்சிஸ்கி அங்கு அந்த கருப்பு அங்கி மனிதன் இல்லாததை கண்டு வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தான் .... 



எங்கே போய் இருப்பார் என்று சுற்றிலும் கவனமாக பார்த்துகொண்டிருந்த போதே சடேரென பாய்ந்து வந்தது அந்த ஓநாய் ... இது எங்கிருந்து வந்தது என  தத்ரோவ்சிஸ்கி சுதாரிபதற்குமுன் அந்த ஓநாய் வேகமாக வந்து அவன் மீதி பாய்ந்து ... 

ஆ.ஆ ..ஆ என் அதிரிச்சியில் அலறியபடி  தத்ரோவ்சிஸ்கியும் அந்த ஓநாயும் உருண்டு முகட்டின் அடிக்கு வந்து விழுந்தனர் ... உடனே சுதாரித்து கொண்ட  தத்ரோவ்சிஸ்கி உருண்டு வந்ததில் தனது துப்பாக்கி எங்கேயோ விழுந்துவிட்டதை உணர்ந்த  கொண்டவன்  தனது இடுப்பில் இருந்த குத்து கத்தியை எடுத்து கொண்டு பயத்தில் நடுங்கிய படி அந்த ஓநாயை தேடினான் ..

சற்று தொலைவில் விழுந்திருந்த அந்த ஓநாயும் எழுந்து கொண்டு  
தத்ரோவ்சிஸ்கியை பார்த்தவரே முன்னம் பற்கள் தெரிய ஊரும்மிய படி பக்கவாட்டில் நகர்ந்து அவன் மீதி பாய தயாரானது ....

வேட்டை தொடரும் ....

எப்போய்

எப்போய்